tamilveli

More than a Blog Aggregator

Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thursday, December 30, 2010

                                               நீ அடிக்கும் ஒவ்வொரு தம்மும் உன்னை அணுவணுவாக கொல்லும்புத்தாண்டில் புகை பிடிப்பதை நிறுத்தி விடுங்கள்

Tuesday, December 28, 2010

Monday, December 27, 2010

தலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்

தலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்


பிரிட்டன் நாட்டில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் அருமருந்தான தேன் பல வழிகளில்மனிதனுக்கு பயன்படுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற உபாதையிலிருந்து விடுதலையளிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது.
இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது
அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம். மேலும் பிரட் உடன் தேனை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம். அது ஆல்கஹாலின் உப பொருளின் பாதிப்பையும் வெகுவாக குறைக்கிறது.
மேலும் ஜான் கூறும்போது, ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தல் நன்மை பயக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகிறார்.

Friday, November 26, 2010

ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!

ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!

வெள்ளி, 26 நவம்பர் 2010 21:38 . .மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூலகாரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி

போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.

எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.

அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலெண்ணெய் போன்றவற்றை 15 – 20 மி.லி., வரை பயன்படுத்தலாம். திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது.

அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கலோரி சாப்பிட்டால் ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 – 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்னை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள், இரண்டு சமோசா 256, இரண்டு போண்டா 283, மிக்ஷர் 100 கிராம் 520, பகோடா 100 கிராம் 474, இரண்டு வறுத்த மீன் 256, இரண்டு வடை 243, முறுக்கு 100 கிராம் 529, உருளை சிப்ஸ் 100 கிராம் 569, சில்லி சிக்கன் 100 கிராம் 589 கலோரிகள். நமது ரத்தத்தில் கொழுப்பு 200 மி.கி., கீழ், டி.ஜி.எல்., கொலஸ்ட்ரால் 150, எல்.டி.எல்., 100க்கு கீழ், எச்.டி.எல்.,(நல்ல கொலஸ்ட்ரால்) ஆண்களுக்கு 40, பெண்களுக்கு 50க்கு மேல், வி.எல்.டி.எல்., கொழுப்பு 30க்கு கீழ் மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது.

சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. இதில் சர்க்கரை உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம். கோவை டயபடிஸ் பவுண்டேஷனில் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தி, ஒரு வருடம் சிகிச்சை பெற்று செலவை குறைக்கலாம். சி.டி.எப்.,ல் முழு உடல் பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை முகாம் இன்று முதல் 27ம் தேதி வரை நடைபெறும். உணவு முறை உடற்பயிற்சியை முதன்மைப்படுத்திய சிகிச்சை சி.டி.எப்., ரிசர்ட் மருத்துவமனையில் செய்யப்படுகிறது. சர்க்கரையை நீக்க மூன்று முதல் ஐந்து நாள் அனுபவ பயிற்சி வழங்கப்படுகிறது.

- டாக்டர் சேகர்,

நாம் குடிக்கும் பியரில் இத்தனையா?

ரின் இன்னொரு ஆச்சரியமான உபயோகம். உண்மையில் ஒரு பச்சை முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பீரில் நன்றாக கலக்கி அடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இது இரண்டு நாட்கள் மட்டுமே உப்யோகப்படும். எதற்கு? என்கிறீர்களா!! ஷாம்பூதான்!! நீங்கள் தலையில் ஊற்றிப்பாருங்கள்... அலாதியான நுரை வரும்!! இது பலரால் உபயோகப்படுத்தப்பட்டு பாராட்டுப்பெற்ற ஷாம்பூ!!

இன்னொரு உபயோகம்! நம்ம அறை நாற்காலி, மேஜை ஆகியவற்றுக்கு பாலீஷ் போடாமல்(துடைக்காமல்!!!) பழையதாகத்தெரியும். பாட்டிலை தொறந்தாச்சு.. கொஞ்சம் எடுத்து ஒரு துணியில் நனைத்து துடைத்துப்பாருங்கள்!! அசந்து போய்விடுவீர்கள்! பளபளன்னு ஜொலிக்கும்!!
 தோலைப் பாதுகாக்க மகளிர் அணி பல அழகு நிலையங்களுக்குப் படையெடுக்கும். மகளிருக்கு இவ்வளவு அழகு நிலையம் வைத்திருக்கும் இந்த உலகம் ஆண்களுக்குன்னு ஏதாவது செய்கிறதா? சரி விடுங்க!! நம்ம கண்டு புடிக்க மாட்டமா என்ன? நம்ம தோலைப்பாதுகாக்க சிறந்த வழி?.....நம் அம்மிணிகள் குளிக்கும் தண்ணியில் வேப்பிலை,கறிவேப்பிலை,தயிர்,கழுதைப்பாலெல்லாம் ஊத்தி ஊறவைச்சுக் குளிப்பார்கள்! இதெல்லாம் வேஸ்ட் மக்கா! குளிக்கும் டப்பில் இரண்டு பீரை ஊத்துங்க! உள்ளே கொஞ்ச நேரம் உக்காருங்க!! டப் இல்லையா? இரண்டு பாட்டில் பீரை தலை முதல் கால் வரை ஊத்தி கொஞ்ச நேரத்தில் குளித்துவிடுங்கள்!!அப்புறம் பாருங்க உங்க தோல் மினுமினுப்பை!! எல்லாரும் உங்க அட்வைஸுக்கு கியூவில் நிற்பார்கள்  படித்ததில் பிடித்தது.

நாம் குடிக்கும் பியரில்  இத்தனையா?

Sunday, November 21, 2010

இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.




பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது:



உறக்கத்தை நிச்சயிப்பது மெலட...ோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.



அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.



அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதை பதப்படுத்தி மாத்திரை போல தயாரித்து வைத்துக் கொள்கின்றனர். இதை சூடான பால் அல்லது யோகர்ட்டில் கலந்து இரவு நேரத்தில் குடித்தால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.



தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மெலடோனின் மாத்திரை அல்லது திரவ மருந்து கொடுக்கப்படுகிறது. மெலடோனின் நாளொன்றுக்கு 3 மில்லிகிராம் அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்
நன்றி   ராகவா

Friday, October 22, 2010

செல்போன் கதிரியக்கம் புற்று நோயை ஏற்படுத்தும்.

செல்போன் கதிரியக்கம் புற்று நோயை ஏற்படுத்தும்செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் காரணமாக புற்றுநோய், நினைவாற்றல் இழப்பு ஆகியவை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.


இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் டேவ்ரா டேவிஸ் எழுதிய டிஸ்கனெக்ட் என்ற புத்தகத்தில் இதை அவர் குறிப்பிட்டு இருக்கிறார். செல்போன் கதிரியக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய ஆராய்ச்சி எதென்ஸ் நகரில் நடத்தப்பட்டது.

அப்போது, ஒரு எலியின் கரு முட்டை கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பிறகு தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்த குட்டி எலி, பிறவிக்குறைபாடுகளுடன் இருப்பது தெரியவந்தது. அதோடு புற்று நோய், நினைவாற்றல் இழப்பு ஆகியவை ஏற்படுவதும் தெரியவந்தது.

Sunday, October 3, 2010

உலகில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்

உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1.மாரடைப்பு (Coronary heart disease)

2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)

3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)

4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)

5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)

6.HIV/AIDS

7.காச நோய் (Tuberculosis)

8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)

9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)

10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)

இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தலாகும்.



Saturday, August 14, 2010

இதுவும் ஒரு நோய்!!!!!

வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்


வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் விநோத நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள நபரொருவரை குணப்படுத்த சீன மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தினரே அவரை சிரமப்பட்டு பராமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயினூடாக சிறிது சிறிதாக சூப் உணவை அவரது குடும்பத்தினர் பருக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர் தானாக எழுந்து மலசலகூடம் செல்லும் உணர்வு கூட இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் படுக்கையிலேயே மல சலம் கழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லி ஷிமிங்கின் விசித்திர நோய் குறித்து அவரது மருமகளான பு யிப் (Fu Yip 42 வயது) விபரிக்கையில், ““அவர் உறக்கத்திலிருக்கும் போது கோமா நிலைக்கு சென்ற ஒருவர் போலவே இருப்பார்.

நாங்கள் கரண்டியால் சூப்பை பருக்கும் போது, அதை அவர் தன்னிச்சையாக விழுங்குவார்.

எதையும் சுயமாக செய்யவோ உணரவோ முடியாத நிலையில் அவர் காணப்படுவார். ஆனால் அவர் விழித்தெழுந்தால் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு சிறிதும் உறங்காது இருப்பார். அவர் வீதிகளில் அலைந்து திரிவதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் இரவைக் கழிப்பார்'' என்று கூறினார்.

Saturday, August 7, 2010

வாழைப்பூ

இது மருத்துவ குணம் கொண்ட பூ. வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளுக்கும் அருமருந்து.




இதில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். அதில் உடம்புக்கு தேவையான ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. இதனால் பல வியாதிகளும் குணமாகும்.

வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் கை கால் எரிச்சல் குணமாகும்.

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.

சிறுநீரகத்தில் உள்ள கல் கரைய வாழைச்சாறு அதிகமாக குடிக்கவும்

படித்த தகவல்

Tuesday, July 27, 2010

பட்டாம் பூச்சியே

பட்டாம்  பூச்சியே உன்பட்டு சிறகில் வண்ணம் தீட்டியவன் யாரு? 

எடை குறைக்க ஆசையா? காலையில் முட்டை சாப்பிடுங்க!

 .அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது.

அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது.

அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. “உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம்.

இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .

Saturday, July 24, 2010

படித்தவறும் பாமரரும்

புகைவண்டிப் பயணம் நீண்ட பயணம் சலிப்பு தட்டாமல் இருக்க படித்த ஒருவர் எதிரே

இருந்த பயணியைப் பார்த்து நாம் இருவரும் விடுகதைப் போட்டு பேசிக் கொண்டே
போகலாமே என்றார். எதிர்த்து அமர்ந்து இருந்த பாமரர் சரியென்று சொன்னார். படித்தவர் சொன்னார், சும்மா சொல்லி சென்றால் சுராசியம் இருக்காது எனவே நான்

படித்தவன் நாலும் தெரிந்தவன் நான் தோற்றால் உமக்கு ரூபாய் 2 கொடுப்பேன், நீர்
தோற்றால் எனக்கு ரூபாய் 1 மட்டும் கொடுத்தால் போதும் என்றார். நீரே தொடங்கும்
பார்க்கலாம் என்றார் படித்தவர்.
பாமரர் தொடங்கினார், ஐயா எட்டு காலு, ஒன்பது வாய், பத்து கை அது என்ன என்றார்.
படித்தவர் தலையை பிய்த்துக் கொள்ளாத நிலையாக, தலையை சொரிந்து கொண்டே சொன்னார்.
தெரியவில்லை சொன்னபடியே நான் முதலிலேயே ரூபாய் 2 தந்து விடுகின்றேன் என்று
ரூபாய் 2 கொடுத்தார்.
வாங்கிக் கொண்டு பாமரர் ரூபாய் 1யை திரும்பக் கொடுத்து விட்டு சொன்னார், ஐயா
எனக்கும் அது தெரியாது என்று.
படித்தவர்கள் தங்களது படிப்பு தரும் அறிவினால், ஆணவம் கொள்ளாது, தாழ்ச்சி
கொண்டு நடந்தால் இன்னும் அதிகம் அறிவு பெறலாம்.
நன்றி
ஜோசப் பி கே

Wednesday, July 21, 2010

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை? எது பொய்?
இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!

1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்:           சாப்பிடக்கூடாத பழங்கள்:

1.ஆப்பிள்                                        1.மாம்பழம்

2.ஆரஞ்சு                                        2.வாழை

3.சாத்துக்குடி                                 3.பலாப்பழம்

4.மாதுளை                                    4.சப்போட்டா

5.கொய்யா                                    5.திராட்சை

6.பப்பாளி 6.சீதாப்பழம்

7.தர்பூசணி

8.அன்னாசி

9.எலுமிச்சை

10.தக்காளி

11.நெல்லிக்காய்
.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.
4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.
5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

Monday, July 19, 2010

கருங்காலி கருணாநிதி.

தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இந்தியச் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு தேவையில்லை :-கருணாநிதிக்கு இலங்கை பதில்!


இலங்கை அரசு நேரடியாக கருணாநிதிக்கு பதில் சொல்கிறது.அப்படியானால் ஏன் கருணாநிதி டெல்லிக்கு கடிதம் எழுதுகிறார்.அட விடுங்க ஈழத்தமிழரை. அப்புச்சி ஆளும் தமிழ்நாட்டின் மீனவர்கள் அறுண்ணூறு பேர் இதுவரை இலங்கை அரசால் கொல்லப்பட்டார்களே அப்போதெல்லாம் டெல்கிக்கு தானே கடிதம் எழுதிநிர்கள்.எழுதிக்கொண்டு இருக்கிறிர்கள்.உங்களால் முடியாத ஒன்றை இலங்கை அரசு எப்படி செய்கிறது கருங்காலி கருணாநிதி.

Sunday, July 18, 2010

சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று வகை:- தியாகி திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச!


ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேறளப்பட்டபடும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.

இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட "சமாதான ஒப்பந்தத்தை" உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது.

இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்; ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை பேசும் இந்திய அரசினாலேயே "கண்டுகொள்ளப் படாமல்" உயிர் இழக்க நேர்ந்தது.
தனை அடுத்து இரண்டாவதாக எமது மனக் கண்களில் நிழலாடுவது, தமிழகத்தின் முதல்வர் "கலைஞர்" நிகழ்த்திய ஐந்து மணிநேர "மெரீனாக்" கடற்கரைப் போராட்டம்.

காற்றோட்டம் நிறைந்த கடற்கரையிலேயே, குளிரூட்டிகள் சகிதம் "உலகப் புகழ்"மிக்க போராட்டத்தை நடாத்தியதன் மூலம் அவர் "முள்ளிவாய்க்கால் படு கொலைகளை" தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்பது இன்றுவரை "மில்லியன் டாலர்" கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

இப்போது மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது, இலங்கை அமைச்சர் ஒருவரின் "போராட்டம்".

சென்ற வருடம், நிகழ்ந்துவிட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மை நிலையினை உலகிற்குத் தெரிவிப்பதற்கென, ஐ.நா வின் தலைமைத்துவத்தால் அனுப்பிவைக்கப் படுவதுதான் இந்த மூவர் குழு.



இதனைக் கலைக்க வேண்டும், இல்லையேல் " சாகும்வரை எனது போராட்டம் தொடரும், நான் இறந்து விட்டால் சிங்களத்தின் மைந்தர்கள் இதனைத் தொடர்வார்கள்" என்று சூளுரைத்துவிட்டுக் களத்தில் குதித்திருக்கிறார் விமல் வீரவன்ச.



இந்த மூவரின் "போராட்டங்க"ளும் ஈழத் தமிழர்கள் தொடர்பானவை என்பதைத் தவிர, அவர்களது குறிக்கோள்கள் வேறுவேறானவையே!



திலீபன் ஓர் "ஆயுதப் போராளி"யாக இருந்தும்; அண்டை நாடொன்று தமிழருக்குச் சில உரிமைகளையாதல் பெற்றுத்தரும் பொருட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தததைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள் என்னும் வேண்டுகோளினை முன்வைத்து அதன் மூலம் உயிர் நீத்தார்.



ஓர் இனத்தின் அவல நிலைக்குப் பரிகாரம் வேண்டிப் போராடியவர் அவர். அதன் பின்னணியில் "பதவி ஆசையோ". "நடிப்போ" இருக்கவில்லை. ஆகையினால்தான் தனது "போராட்டத்தில்" உறுதியோடிருந்து, அதனை உதாசீனம் செய்த "அரசுகளின் நடவடிக்கைகளால்" தனதுயிரையும் இழக்க நேர்ந்தது.



அவர் "புலி"யாகவோ அல்லது "சிங்க"மாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.



"கலைஞ"ரின் "உண்ணா விரதப் போராட்டம்" எத்தகையது என்பதை இங்கு விபரமாக எழுதவேண்டியதில்லை. அண்மையில், இலங்கை அரசினால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மீது திடீர்ப் "பாசம்" கொண்டு மீண்டும் "கடிதம்" எழுத ஆரம்பித்ததில் மறைந்திருக்கும் "2011" தமிழகத் தேர்தல் குறித்த அவரது "காய் நகர்த்தல்களை" புரிந்துகொண்டவர்களுக்கு, அன்றைய அவரது "மெரீனா ஒத்திகை"பற்றிய பின்னணியையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



"வீர வன்ச" வின் போராடம் சற்று விசித்திரமானது !



இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும், ஐ.நாவுக்கு, அண்மைக்காலங்களில் கிடைத்த, "2009 ம் ஆண்டின் தமிழினப் படு கொலைகள்" பற்றிய உண்மைகளை அறியும் நிர்ப்பந்தம் அல்லது கடமை உருவாகியிருந்தது.



அதனை நிறைவேற்றுவதற்காக ஐ.நாவின் தலைமை மூவரை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டது.



ஏற்கனவே எமது நாட்டில் அதனை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துவிட்டோம், இனி எதற்கு ஐ.நாவில் விசாரணை என்று "குதிக்கிறது" இலங்கை.



அதன் நிலையை ஆதரித்துப் "போராட்டத்தில்" இறங்கியிருக்கிறார் வீரவன்ச.



ஐ,நா வின் போக்கினை ரஷ்யா போன்றவை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. ஒரு காலத்தில் "இரும்புத்திரை நாடு" என்று பெயர் பெற்றிருந்த ரஷ்யா , செச்சென்யாவால் "தலை வலி"யை அனுபவிக்கும் ரஷ்யா ஐ.நாவைக் கண்டிக்காது விட்டிருந்தால்தான் ஆச்சரியம்!



"முக்காடு" போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா இன்னும் வாய் திறக்கவில்லை.



வீரவன்ச எதற்காகப் பயப்படுகிறார் என்பதை அவரது பேச்சே எதிரொலிக்கிறது!



இலங்கையின் தேசீயப் பத்திரிகைகளுள் ஒன்றான "வீர கேசரி"யின் சென்ற வெள்ளிக்கிழமை [09-07-2010] முகப்புச் செய்தியில் வீரவன்சவின் "வீர வசனங்கள்" பதிவாகியிருக்கின்றன.



�வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளைக் கொன்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தையும் அரச தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிட பான் கீ மூனின் நிபுணர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சிலரது ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.



எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா வின் நிபுணர் குழுவை குறைவாக கணிப்பிடக் கூடாது. ஏனெனில், இந் நிபுணர் குழு எதிர்வரும் நாட்களில் விசாரணைக் குழுவாக மாறலாம். பின்பு பல விசாரணைகளை நடத்தி பொய் குற்றச் சாட்டுகளை நிரூபித்து எமது நாட்டுத் தலைமைத்துவங்களை சர்வதேசம் தூக்கிலிட்டுவிடும்." இவ்வாறு பேசியிருக்கிறார் விமல் வீரவன்ச.



இத்தனைக்கும், ஐ.நா; இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நம்பியாரையும், மேனனையும் நம்பிக் "கைகட்டி நின்ற" ஓர் நிறுவனந்தான்!



இதற்குப் போய் வீரவன்ச இவ்வளவு தூரம் பயப்படுவதுதான் வியப்பாக உள்ளது.



ஒரு வேளை இதுவும் சர்வதேசம் ஆடும் மற்றொரு நாடகமோ ? யார் கண்டது!

Wednesday, July 14, 2010

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான்.

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.
அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.
இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.
மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
நம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.
அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.
1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.
1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.
ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.
1988ம்ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.
இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.
அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,
நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.
ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.
ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது என்றார்.

Tuesday, July 13, 2010

ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிக்கு எதிரான பிரசாரத்தை எதிரொலிக்கிறது:

ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிக்கு எதிரான பிரசாரத்தை எதிரொலிக்கிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தலைமையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பகிரங்க விரோதத்தை வெளிப்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று விமர்சித்துள்ளது

Friday, July 9, 2010

Wednesday, July 7, 2010

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள் (120). அவர்களுக்கு 10 குழந்தைகள். அதில், ஆறு குழந்தைகள் இறந்து விட்டன.
தற்போது, முத்து (85), காளியப்பன் (65), சின்னசாமி (62) என்ற மகன்களும், மாதம்மாள் (60) என்ற மகளும் உள்ளனர்அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 பேர்.காவேரியம்மாள் 120 வயதிலும் கைத்தடி ஏந்தி கிராமத்தில் சமையல் செய்து, தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளை கண்ட காவேரியம்மாள், இது வரையில் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது.அவருக்கு தற்போது புதிதாக பல் முளைத்திருப்பதை கண்ட அவரது உறவினர்கள், கிராம மக்கள், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காவேரியம்மாளுக்கு சடங்கு செய்து, அவரிடம் ஆசி பெற்றனர்.கிராமத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் காவேரியம்மாளிடம் முதல் ஆசி பெற்று செல்கின்றனர். இன்று வரையில் தனக்கு தேவையான சமையல், வீட்டு வேலைகள் வரை அவரே செய்து கொள்கிறார். அவரது மகன்கள், மகள் வீட்டுக்கு அழைத்த போதும், "தன்னால் முடியும் வரையில் சமைத்து சாப்பிடுவேன்' எனக்கூறி தனியாக குடித்தனம் நடத்தி வரும் காவேரியம்மாள்,வயதில் பூப்படைந்தேன்.

ஆரம்பத்தில் எனது சொந்த ஊரான தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியில் குடியிருந்தோம். கோவிந்தாபுரம் வனப்பகுதியில் கட்டைகள் வெட்டும் கூலி வேலைக்கு நானும், என் கணவரும் வந்தோம். தொடர்ந்து வேலை இருந்ததால், கோவிந்தாபுரத்தில் குடியேறி விட்டோம். சோளம், தினை, கேழ்வரகு ஆகியவற்றை உணவு செய்து சாப்பிட்டோம். தற்போது, சாதம், களி, மட்டன் சாப்பிடுகிறேன்.கடுமையான உழைப்பும், நல்ல உணவும் என் ஆரோக்கியத்துக்கு காரணம் என நினைக்கிறேன். இது வரையில் ஊசி போட்டதில்லை, மாத்திரைகள் சாப்பிட்டதில்லை.

வீட்டில் நான் மூத்தவள் என்பதால், என் மகன்கள் முதல் உறவினர்கள் வரையில் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் காட்டி வருவது எனக்கு ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது. அரிசி சாதம் சமீபத்தில் தான் சாப்பிடுகிறேன். கம்பு, கேழ்வரகு கூழ் தான் எனக்கு முக்கிய ஆகாரம். கிராம மக்களும், உறவினர்களும் நான் மறு பிறவி எடுத்திருப்பதாக எனக்கு சடங்குகள் செய்து, நான் இன்னும் பல ஆண்டு வாழ பூஜைகள் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பம் கொடுத்தேன்.

எனக்கு அதிகம் வயதாகி விட்டது எனக்கூறி முதியோர் உதவி தொகை கொடுக்க மறுத்து விட்டனர். அரசு எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.உடல் நல பாதிப்பு: டாக்டர் கணிப்பு : காவேரியம்மாளுக்கு நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ""பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருக்கலாம்.

அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை. ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல் முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,'' என்றார்."அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு' என, டாக்டர் கூறியதை காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம் வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறினர்.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய தகவல்கள் இதில் உள்ளது.உங்களுக்கு தெரித்த இந்திய நண்பர்களுக்கு அனுப்பிவைக்கவும் நன்றி.

Dear All,
--------------

I received a Wonderful e-mail from my friend..I would like to share

this to you all....

1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact

"RED SOCIETY" 9940217816. They will help that children for their

studies.
2. There is a Website: www.friendstosupport.org where you can search

for any BLOOD GROUP, you will get thousand's of donor address.


3. Engineering Students can register in www.campuscouncil.com to

attend Off Campus for 40 Companies.


4. Free Education and Free hostel for Handicapped children..!

Contact:- 9842062501 & 9894067506
5. If anyone met with fire accident or people born with problems in

their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by

Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German

Doctors. Everything is free. Contact : 045420-240668,245732 "Helping

Hands are Better than Praying Lips"
6. If you find any important documents like Driving license, Ration

card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put

them into near by any Post Boxes. They will automatically reach the

owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than

what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So

all of you lend your hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastic

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all

Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them
9. Special phone number for Eye bank and Eye donation 04428281919 and

04428271616 (Sankara Nethralaya Eye Bank)
For More information about how to donate eyes plz visit these sites. . .
http://www.kannoli.com/eyebank.htm
http://ruraleye.org/


10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba

Institute Banglore. Contact : 9916737471


11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your

home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only

in India ) - Its not a Joke - Child helpline. They will come and

collect the food. Please circulate this message which can help feed

many children.



.

Tuesday, June 29, 2010

உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்கும் வீடியோ


http://www.ted.com/talks/sunitha_krishnan_tedindia.html
சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் கற்பழிக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது..

ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுனிதா கிருஷ்ணன்.

தான் காப்பாற்றிய குழந்தைகளை மனித மிருகங்கள் சில நான்கு வயது என்று கூட பார்க்காமல் சீரழித்த கொடூரம் ஆன்மீகமும், தெய்வத்தன்மையும் நிரம்பியுள்ள நம் தேசத்தில்தான் நடந்திருக்கிறது.. செக்ஸ் அடிமைகளாய் விற்கப்பட்ட அல்லது வறுமை காரணமாய் அல்லது விரும்பியே தொழில் செய்யும் பெண்கள் HIV ஆட்கொல்லி நோயில் விழும்போது அவர்களின் சம்பாத்தியத்தில் வாழும் அத்தனை பேரும் நிராதரவாய் விட்டுப் போகும் கொடூரமும் நம் தேசத்தில்தான் நடக்கிறது.

அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வந்து அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பை தேடும்போது இந்த நாகரிக சமூகம் அவர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது ஏன்.. வாரம் இரண்டாயிரம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு பெண்மணி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்கள் வேண்டாம் என மறுக்கும்போது வருத்தமாயிருக்கிறது.

Friday, June 25, 2010

உலகில் உங்கள் எதிர்ப்படும் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?

                        படித்ததில் பிடித்தது
அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா? ஏன் முடியாது. குழந்தைகளாக இருக்கும்போது அந்த உணர்வு இல்லையே. வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர்விட்டு படர்ந்து விருட்சமாக வளர்ந்தது வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள் உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள்.
குழந்தைகளாக இருக்கும்போது மனதில் துளிர்விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும், வளர்ப்பாலும் நம் மனதில் மெல்ல குடிபுகுகிறது விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்ட நேரிடுகிறது.
இந்த வெறுப்புணர்வால் நமக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. நண்பர்களின் வழிகாட்டால், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பதுதான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியதுதான்.
பல வகைகளில் வெறுப்பு உருவெடுக்கும். ஒருவரின் இனம், குணம், நிறம், பேச்சு, மதம், பொருளாதாரம், பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நச்சுக் குணம் நம் மனதில் குடிகொள்ளும்.நாம் பேசும் வெறுப்பான வார்த்தைகள், நம்மிலிருந்து தெறித்து, எதிர்படுபவர் மீது விழும்போது, அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்துவிட்டால் அவ்வளவுதான்.அனைவருமே உங்களுக்கு எதிரியாக தோன்றுவார்கள்.பிறருடைய வளர்ச்சி உங்களை ஏளனம் செய்வது போல தெரியும்.வெறுப்புணர்ச்சியை ஒழிக்க இங்கே தரப்பட்டுள்ள 10 வழிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.
செயல்பாடு
==========
‘நீ எவ்வாறு நினைக்கிறாயோ அவ்வாறே வளர்வாய்.’’ இது ஒரு பழமொழி.உங்களுடைய நினைப்பும், செயல்பாடும் மிகவும் முக்கியம்.உங்களின் செயல்பாடும், பேச்சும் எவ்வாறு அமைய வேண்டும். பொறுமையையும், அன்பையும் வெளிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.உங்களுடைய செயல்பாடே, அனைத்து கெட்ட நிகழ்வுகளுக்கும், நல்ல நிகழ்வுகளுக்கும் அடிப்படை…உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் உணர்த்த வேண்டும்.இனம், நிறம், சாதி, மதம் பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.-அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது.இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலைநிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்புணர்வு ஒழிந்து அன்பு மலரும்.
ஒருங்கிணைப்பு :
===============
தனிப்பட்ட நபர் மீதோ அல்லது குழு மீதோ உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கலாம். அந்தக் குழுவினரையோ அல்லது தனிப்பட்ட நபரையோ நீங்கள் ஒதுங்கி வைப்பதுபோல் வேறு பலரும் ஒதுக்கி வைக்கலாம். வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைத்து, பொறுமையின் முக்கியத்துவத்தையும், வெறுப்புணர்ச்சியின் பாதிப்புகளையும் எடுத்துரைக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி ஏன் மனதில் தோன்றுகிறது என்பதை ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்து அதை மனதிலிருந்து அகற்றுவதற்கான ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்.தொடக்கத்தில் வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைப்பது சிறிது சிரமமாக இருக்கும்.நாளடைவில் குழு முறையில் அமர்ந்து அவர்களுடன் நீங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.இதன் மூலம் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படுவது நிச்சயம். பல்வேறு குணங்களைக் கொண்டோருடன் கலந்துரையாடி, மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நட்புறவு வளர்ந்து வெறுப்பு மறைவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே, வெறுப்புணர்ச்சியுள்ள நபரை ஒருங்கிணைத்து அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அந்தக் குணத்தை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
ஆதரவு :
==============
நமது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியம். உடல் ரீதியாக, மனரீதியாக, பாலின ரீதியாக மட்டுமின்றி, இனம், நிறம், சாதி பொருளாதார அடிப்படையில் கூட வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். தாக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளில் இருந்து, சட்ட உதவிகள் வரை அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்பது அவசியம்.மற்றவர்களுக்கு உதவி செய்வதை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். வேறு சிலரோ, யாரேனும் உதவி செய்ய முன்வர மாட்டார்களா என்று ஏங்கியிருப்பார்கள். அத்தகைய நபர்களை இனம் கண்டு ஆதரவு அளிப்பது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.நாம் மட்டும் ஆதரவு அளித்தால் போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி செய்ய வேண்டும்.
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட பிரிவினரை நாம் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும். அவர்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு அவர்களுக்குள் மெல்ல மறைவதற்கு இவை உதவும்.நீங்கள் தனியாக இல்லை. நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அளிக்கிறீர்கள் எனபதை மறந்து விடாதீர்கள். மதநம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்தந்த மதத்திற்குரிய சின்னங்கள், கடவுள்களின் படங்களை அளித்து நம்பிக்கை ஊட்டலாம்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களால் பாதிக்கப்படலாம். வார்த்தைகளாலோ அல்லது உடல்ரீதியாகவோ அவர்கள் தாக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால் அத்தகையோருக்கு பாதுகாப்பு அளிக்கலாம்
செயலில் இறங்குங்கள் :
===============================
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களையும் இச்செயலில் ஈடுபடுத்தினால், அவர்களின் அனுபவ வார்த்தைகள் நிச்சயம் வெறுப்புணர்வுடன் இருப்பவர்களுடைய மனதையும் மாற்ற உதவி புரியும்.
மாற்றுவழிகளைக் கண்டுபிடியுங்கள் :
========================================
வெறுப்புணர்வை பரப்பும் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் ஒதுக்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பிரினருக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தால் அதில் கலந்து கொள்ளாதீர்கள். அவர்களுக்கு எதிரான ஊர்வலத்தை புறக்கணியுங்கள். தனிப்பட்ட ஒருவருக்கு எதிரானதாக் இருந்தாலும் அதைக்கூட தவிர்த்து விடுங்கள்.உங்கள் அருகில் வெறுப்புணர்வை வளர்க்கும் விதத்தில் யாரேனும் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அவரகளிடம் வெறுப்புணர்வைக் குறைக்கும் வழிகளைக் கூறுங்கள்.அன்பையும், ஒற்றுமையும், மனித உரிமையின் அவசியத்தையும் அவர்களிடம் வலியுறுத்துங்கல். மனிதாபிமானத்துடன் மற்றவர்களுடன் பழக வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுங்கள். வெறுப்புணர்ச்சியை மறக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றுவழிகளை தேட வேண்டும்.
போராட்டம் :
==============
மனம் முழுவதும் வெறுப்புணர்வை நிரப்பியவர்களை கண்டுபிடியுங்கள். அவர்களுடைய மனதிலிருந்து வெறுப்புணர்வை ஒழிக்கப் போராட்ட வேண்டும்.அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருக்கும் வெறுப்புணர்வை எடுத்துக் காட்ட வேண்டும்.அதற்கு, நடுநிலையுடன் செயல்படும் நபர்கள், நிறுவனங்கள், நாளேடுகள் ஆகியவற்றை துணையாகக் கொள்ளுங்கள். ஆனால், எவ்விதத்திலும் வெறுப்பை ஒழிக்க வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் நேரடியாக மோதாதீர்கள். அவர்களை நேரடியாக கண்டிக்காதீர்கள். இப்படி செய்தால் அவர்களுடைய வெறுப்புணர்வை நாம் ஈட்ட வேண்டியது வரும்.மறைமுகமான வழிகள் மூலமாகவே போராட வேண்டும். வெறுப்புணர்வுடன் உள்ளவர்கள் கூடும் இடங்களை தேடிப்பிடியுங்கள்.பொறுமையின் அவசியத்தையும், அன்பின் முக்கியத்துவத்தையும் அங்கு பரப்புங்கள். வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்யுங்கள். இணையதளங்கள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், நாளேடுகள் வாயிலாக பரப்புங்கள்.
புகழ்பெற்றவர்கள் மூலம் பிரச்சாரம் :
==================================
வெறுப்புணர்வை ஒழிக்க முகம் தெரியாத நாம் கூறும் கருத்துகளையும், ஆலோசனையைக் காட்டிலும், தெரிந்த ஒரு முக்கிய நபர் மூலமாக வெறுப்புணர்வுக்கு எதிரானக் கருத்துகளைப் பரப்பலாம். நடிகர், நடிகைகள், கட்சித் தலைவர்கள், ஊர் பெரியோர்கள், மதத்தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மூலமாக வெறுப்புணர்வை ஒழிக்கும் வழிகளை எடுத்துக் கூறுவதன் மூலமாக கருத்துகள் 100 மடங்கு விரைவாக அனைவரையும் சென்றடையும். இத்தகைய புகழ் பெற்றவர்கள் மூலமாக கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் நடத்துவது பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலம் வெறுப்புணர்வு உள்ளவர்களையும் இணைத்து அவர்கள் மனதில் உள்ள குணத்தை ஒழிக்கச் செய்யலாம். அதற்கான பாதிப்பும் நிச்சயம் இருக்கும்.

தொலை நோக்கு :
வெறுப்புணர்வை தற்சமயத்திற்கு மட்டும் ஒழிக்காமல், எதிர்காலத்தில் அத்தகைய குணம் மனதில் தோன்றாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு நம் எண்ணங்களையும், செயல்களையும், சிந்தனைகளையும் அகலப்படுத்திக் கொள்வது முக்கியம். வெறுப்புணர்வு என்பது முதலில் நம்முடைய வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. நம் மனதிலிருந்துதான் தொடங்குகிறது. அதை எவ்வாறு வேரறுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். வெறுப்புணர்வை ஒழிக்க மிகச்சிறந்த வழி பொறுமை என்று மனோவியல் வல்லுநர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆதலால் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். எப்போதும் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு பிரிவினரைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் மனதில் அவர்கள் குறித்த தவறான எண்ணங்களை வளர்க்கும் பழக்கத்தை அழிக்க வேண்டும். இந்த எண்ணமாற்றம் மனதில் உதித்துவிட்டால் செயல்பாடுகளில் நிச்சயம் மாற்றம் வரும். தவறான, முழுவிவரம் தெரிந்து கொள்ளாமல் வரும் எண்ணங்களே வெறுப்புணர்வுக்கு அடிப்படை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பொறுமையைக் கற்றுக்கொடுங்கள் :
-------------------------------------------------------------\
விதை நன்றாக இருந்தால் விளையும் பொருளும் நன்றாக இருக்கும். ஆதலால், வெறுப்புணர்வை ஒழிக்கும் நடவடிக்கையை குழந்தைகளிடமிருந்து தொடங்குவது சிறந்தது. அவர்களுக்குப் பொறுமையின் முக்கியத்துவத்தையும், சக மாணவர்களிடம், தோழிகளிடம் காட்டும் அன்பின் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும். இன, மத, பொருளாதார உணர்வுகளில் உண்டாகும் வெறுப்புகளால் விளையும் தீமைகளை எடுத்துக்கூற வேண்டும்.நல்ல கதைகள், நாடகங்கள், பாடங்கள், பாடல்கள், ஓவியங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் பங்கேற்கச் செய்யலாம். யோகா, இசை, உள்ளிட்டவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அதன் மூலமாக பிறரிடம் வெறுப்புணர்வை காட்டாமல் இருப்பது குறித்து உணர்த்தலாம்.
உங்களைச் சோதித்துக் கொள்ளுங்கள்
=========================================
உங்கள் மனதில் பிறரைப்பற்றிய தவறான எண்ணங்கள், முழுமையாக அறியாமல் வளர்த்துக் கொண்டுள்ள தவறிய கணிப்புகள் ஆகியவற்றை வெளிக்கொணருங்கள். அவை எவ்வாறு உருவானது என்பதற்கு காரணத்தைத் தேடுங்கள்.



Written by Thurai

Saturday, June 19, 2010

சிங்கத்தின் உயர்ந்த பண்பு அவனுக்கு உயிருபாதை....

படித்ததி பிடித்தது
-----------------------------
காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.
பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்
போச்சு !!!
தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.
”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்… கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”
பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.
”ஆஹா… தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.தப்பித்து விட்டோம்….
சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது....

எல்லா அப்பாக்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

எல்லா அப்பாக்களுக்கும்  என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.  உன்பிள்ளைகளுக்காக வாழ்ந்திடு அவர்கள் சொல்லும் அப்பா! என்ற ஒருவார்தைக்காய்!!!!!!....  
நீ கொஞ்சும்போது அந்த
பிஞ்சு மனம் துள்ளும்
நீ கெஞ்சும்போது அந்த
குழந்தை மனம் உன்மடியில்.......

Sunday, June 13, 2010

புதிர்

இந்த படத்திலே ஒரு வரலாற்று புகழ்மிக்க இடம் உண்டு.அது என்ன என்பது உங்களுக்கு தெர்யுமா?
தெரியாவிட்டால் கீழே
                          செல்லுங்கள்







                                                                                                         எதாவதா  விடை கிடைத்ததா ?






இல்லையா?






அது தாங்க







சிவனொளிபதமலை. மரத்தடியி நின்று பாருங்கக் தூர  தெரியும் மலை தான் அது. கும்பிடுபவர்கள் கும்பிட்டுக்கொங்கோ .

Saturday, June 12, 2010

மருத்துவம் மாரடைப் பு

மாரடைப்பு உட்பட்ட இதய வலி நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகள்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாஒன்று மாற்ற முடியாத காரணிகள் .அதாவது இயற்கையாகவே அமையப் பெற்ற காரணிகள் .இவற்றை நாம் மாற்ற முடியாது.உதாரணமாக ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் போன்றோரில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகம் ஆனாலும் இது சம்பந்தமாக நம்மால் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது.
ஆனால் அடுத்த வகையான காரணிகள் காட்டுப் படுத்தக் கூடியவை.மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் , ஆனால் நம்மால் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள்.
நீரழிவு நோய் – இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைகுறைக்கலாம்.
புகைத்தல்- புகைத்தல் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப்பு ஏற்படலாம்.
அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் – சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் நமக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மருந்துகள்பாவிக்கப்
உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) – இந்த நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள
மன அழுத்தம்(stressful life) – அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.

Wednesday, June 9, 2010

ராஜபக்சேயுடன் வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய கோரி வழக்கு



ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சரும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகமக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார்
ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சரும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகமக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு
இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகு, 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். 1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Sunday, June 6, 2010

தமிழினமே உனக்கென்றோர் கடமை உண்டு அது?????????????? என்றால் சிந்தி !சிந்தி !!!!!!!!!!!!!!!!!!

சனல் 4 தொலைக்காட்சிக்கு விருது கொடுத்தவர்களுக்கு எம் இனத்தின் சார்பாக நன்றிகள் பலகோடிகள்.ஆனால் ஒன்று செய்தி ஆக்கிய உங்களுக்கு விருதென்றால் எங்களுக்கு பிணவாடை மட்டும் தான? இது புரியவில்லையே எம் அயல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணை இல்லா கருணாநிதிக்கு. கொண்டாடுகிறார் செம்மொழி குத்தடிக்கிறார் சோனியாவோடு. இதற்கு எதிப்போரும் உண்டு அவர்களுக்கு என் நன்றிகள் (எதிப்புக்காக மட்டும் உங்கள் அரசியலுக்கல்ல) ஆதரிப்போருக்கு ஒன்றுமட்டும் சொல்வேன் உனக்கு பக்கத்தில் உன் உறவுகளின் பிணவாடை வீசும் ஒருநாள் அப்போது நீ கவி படைப்பாய் எமக்காய் !


தமிழினமே உனக்கென்றோர் கடமை உண்டு அது?????????????? என்றால் சிந்தி !சிந்தி !!!!!!!!!!!!!!!!!!

: உங்கள் தொலைபேசி திருட்டுப்போய்விட்டதா??? கண்டுபிடிக்க மென்பொருள்

Friday, June 4, 2010

நீங்கள் கர்ப்பவாதியா ? அப்படியானால் இதை படிங்க


தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான omega-3 fatty acids’ (docosahexaenoic acid)மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.
தாய், சிசுவின் உடலில் ‘omega-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.
32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

Wednesday, June 2, 2010

Welcome to tamiltheepam.com » Blog Archive » Blood on Water- A Video Documentary of Srilankan Tamils by NDTV

Welcome to tamiltheepam.com » Blog Archive » Blood on Water- A Video Documentary of Srilankan Tamils by NDTV: "- Sent using Google Toolbar"

தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் – யாழ். சிறை சம்பவம்!



யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளினால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.



இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை நேரடியாக கண்ட பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தமையை அடுத்து நீதிபதி இ.த.விக்னராஜா நேற்று இந்த விடயம் தொடர்பாக விளக்கத்தை கோரினார்.



இதனையடுத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது நேற்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் சிறை அதிகாரிகளால் தாக்குதல்களுக்கு உள்ளான அரசியல் கைதிகள் காயங்களுடன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இவர்களின் வாக்குமூலங்கள் நாளை பெறப்படவுள்ளன.



சிறை யன்னல் கம்பி ஒன்று அகற்றப்பட்டிருந்ததை கண்ட சிறைக்காவலர்கள் அது கைதிகள் தப்பி செல்வதற்காகவே அகற்றப்பட்டிருப்பதாக கூறியே அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 12, 2010

மோப்பம் பிடிக்கும் செல்போன்!!!


குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது.இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும். இந்தக் கருவியை தற்போது செல்போனுடன் இணைத்து வழங்குகிறது அமெரிக்க நிறுவனமான `ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’.
இந்த அமைப்பு `செல்-ஆல்’ என்ற நவீன சென்சார் கருவியை தயாரித்துள்ளது. இதனை செல்போன் களில் பொருத்திக் கொண்டால் காற்றில் நச்சு ஆபத்துகள் இருந்தால் எச்சரிக்கும். நமக்கு தீமை விளைவிக்கும் குளோரின், சாரின் போன்ற விஷ வாயுக்கள் இருந்தால் ஒலி எழுப்பும். ஒரு வேளை நீங்கள் செல் போனை வைப்ரேசனில் வைத்திருந் தால் எஸ்.எம்.எஸ். அனுப்பும்.
அதேபோல் அதிக நச்சுத்தன்மையை உணர்ந்தால் பலமாக ஓசை எழுப்பி உங்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் உஷார்படுத்தும். அத்துடன் எந்த இடத்தில் இந்த நச்சுவாயு பரவி இருக்கிறது என்ற தகவலை அவசர உதவி மையத்துக்கும் அனுப்பி வைக்கும்.
பயனுள்ள இந்தக்கருவி மிகச்சிறியதாக இருக்க வேண்டும், மிகக்குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. அதற்கேற்ப இதன் விலையும் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Technology News @ LankasriTechnology.com

"மருத்துவ செய்தி
இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்

இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால், அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு ‘பளீர்’ என்று விளக்கு எரிந்தால் கூட, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்,’இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும், நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும். மிக மிகக் குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு விளக்குகள் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அவைதான் பாதுகாப்பானவை’ என்று தெரிவித்தார்

Thursday, April 29, 2010

வாழ்க்கை உனதாகும் அது வழமாகும்

ஏழ்மையை கண்டு பயந்து விடாதே.துன்பத்தைக் கண்டு கலந்கிவிடாதே.தோல்வியைக்கண்டு துவண்டுவிடாதே.ஏமாற்றத்தை கண்டு சலித்துவிடாதே.எல்லாம் நன்மைக்கென்ற முன்னேறு... வாழ்க்கை உனதாகும் அது வழமாகும்......

Tuesday, April 27, 2010

ஒருகோடி டொலர் இருந்தால் காரில் பறக்கலாம்

பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்

 
வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள்  பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை, 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Monday, March 29, 2010

சர்க்கரை... சர்க்கரை... சர்க்கரை.

சர்க்கரை... சர்க்கரை... சர்க்கரை.....

கி.பி.2000த்தில் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி மக்கள் தொகையில் 2.8 கோடிப்பேர். 2003-ல் 18.9 கோடி. இது கி.பி.2030ல் இரு மடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது. அது போகட்டும். இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா? 1995-ல் 1.9 கோடி. 2005-ல் 3.5 கோடி, 2007ல் 4 கோடி, 2008 ஜூன் 8ம் நாளின் படி 4.1 கோடி ( உலக அளவில் 24.0 கோடி) கி.பி.2025ல் வெற்றிகரமாக 7 கோடியை எட்டும் என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அப்போது உலகில் இந் தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்.

ஏன் சர்க்கரை நோய்

அதெல்லம் சரி! சர்க்கரை நோய் என் றால் என்னப்பா... என்கிறீர்களா? நாம் உட் கொள்ளும் அனைத்து உணவும், உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகின்றது. உட் கிரகித்தலின் மூலம் இரத்தத்தில் சர்க்கரை யாக கலக்கிறது. ஆமாப்பா.. நீங்கள்இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றா லும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி, மட் டன், மீன் என எது உண்டாலும் அது இறுதி யில் சர்க்கரையாக மாற்றப்பட்டே இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தம் மூலம்தான் உடல் உறுப்பு களுக்கு வேண்டிய சக்தி கொடுக்கப்படுகிறது. இந்த சுழற்சியில், இரத்தத்தில் உடலுக்குப் போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா...! கணையம் என்ற சுரப்பி சுரக்கும் இன்சுலின் என்ற ஹார் மோன், அதிகமான சர்க்கரையை, கிளை கோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பாக்கு கிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ ரோத னைதாம்ப்பா..! அதுதாண்ணே சர்க்கரை வியாதி என்ற அருமையான பேருப்பா.. நாம் சர்க்கரை சாப்பிடாததற்கு...!

சர்க்கரையின் காரணி

சர்க்கரை நோய் நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது. இப்போது பொதுவாக பரம்பரை, பரம்பரையாக வரும் என்றாலும், இன்று அதையெல்லாம் தாண்டி, குண்டாக இருப்பவர்களுக்கும் நவீன உணவு மற்றும் வாழ்க்கை முறையும் தான் முக்கியக் காரணிகள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம முன்னெல்லாம், எல்லா இடத்துக்கும் நடந்தே செல்வோம். இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் நம் நடையைக் குறைத்துவிட்டன. நாம் நடக்க சோம்பேறிகளாகிவிட்டோம். அதுவும் கூட சர்க் கரை நோய்க்கான காரணிகளில் ஒன்றாகி விட்டது. அது மட்டுமில்லேப்பா, இன்றைக்கு வாழ்க்கைச் சூழலில் அனைவருக்கும் எல்லா சூழலிலும் பல்வேறு வகையான மன அழுத்தங்கள், மன இறுக்கங்கள் உள்ளன. அதுவும் கூட சர்க்கரை நோய் வருவதற்கான காரணமாம்பா..! அதுமட்டுமல்ல.. நகர்மயமா தல், தொழில்மயமாதல், சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் வாழ்விய லில் அவசர கதியில் செயல்படுவதால்.. ஏரா ளமான உணவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நோய்களில் முக்கிய மானது சர்க்கரை நோய்ப்பா...!

உறுப்புகளை சிதைக்கும் சர்க்கரை நோய்!

சர்க்கரை நோய் என்பது அனைத்து நோய்களின் தாயகம்; உற்பத்திக்கூடம் என்றே சொல்லலாம். இதயம், இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக செயலி ழப்பு, நரம்பு பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, ஆண்மை இன்மை ஏற்படுகிறது. விரல்கள், பாதங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. விரல் களிலுள்ள நரம்புகள் சிதைந்து போய், கான் சிரூன் ஏற்பட்டு விரல், கால்களை எடுத்து விடும் நிலை ஏற்படுகிறது.

விழிப்புணர்வற்ற அரசு

மருத்துவ சோதனைக்கு பின்னும் கூட, சர்க்கரை நோயாளிகளிடம் ஏராளமான கவனக்குறைவு உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் மருத்துவரிடம் சென்றாலும், நோய்க்கான அறிகுறி நின்று, நோய் கட்டுப் பாட்டு நிலைக்கு வந்ததும், மருத்துவரிடம் செல்வதை நிறுத்திவிடுகின்றனர். பெரும்பா லான நோயாளிகள், இந்திய பாரம்பரிய, சித்தவைத்திய முறைகளை எடுக்கிறேன் என அலோபதி மருந்துகளை கைவிட்டுவிடுகின் றனர். சர்க்கரை நோய் அதிகரித்தவர்களில் நிறைய நோயாளிகள் இன்சுலின் போட பயந்து அல்லது இதுவே பழக்கமாகிவிடும் எனப்பயந்து, இதனைத் தவிர்க்கின்றனர். இத னால் தொடர்ந்து, மருத்துவரை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் சர்க் கரை நோய் முற்றி சீக்கிரமே அவர்களின் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. மேலும் வள மின்மை, மருத்துவ மீட்பு வசதியின்மை, மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை போன்ற வற்றையும், சர்க்கரை நோய்க்கான அரசின் தரமான சிகிச்சைக்கான தடையாக உள்ளன.

கவனம்... கவனம் ...கவனம்...!

மிகக்கவனமாக இருந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந் தால் சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அத னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதை தெளிவாகத் தெரிந்து நடந்து கொள்வது உயிர்வாழ்வதற்கு உதவிசெய்யும்.

நம்புவதும்....நடப்பதும்...!

சர்க்கரை நோயுள்ளவர்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது. எண்ணெய் பொரித்த பொருட்களை, கொழுப்பு உணவு களை உண்ணலாம் என நினைக்கின்றனர். இது இரத்தத்தின் கொழுப்பை அதிகரித்து, மோசமான பின்விளைவுகளை, மிகை இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணும். இரத்தத்தில் அதிகமான வைட்டமின்-சி இருந் தால், அது 62 சதவீதம் சர்க்கரை நோய் வரு வதை தடைசெய்கிறது. நீங்கள் உணவருந்த உட்கார்ந்ததும், தட்டை 4 பகுதிகளை கற்பனை கோடு வரைந்து கொள்ளுங்கள். 1/4 பங்கு தானியம், உணவு, 1/4 பங்கு புரதம், 1/4 பங்கு காய்கறிகள் உண்ணவும், காரட், கீரை, தக்காளி மற்றும் கொழுப்பற்ற 1 டம்ளர் மோர் அருந்தவும், இவையெல்லாம் உங்களின் சர்க்கரை நோயைக் குறைக்கும்.

உயிர்காக்க...!

சர்க்கரைக்கு மாறாக பயன்படுத்தும் பொருட்கள், சர்க்கரையைவிட மோசமான விளைவைத் தரும், செயற்கை இனிப்பு களையும் பயன்படுத்துவது தவறு. அதை உண்ணுவதால் நம் உடல் சீனிக்காக ஏங்கி தவம் கிடக்கிறது. தினமும் இரவு படுக்கப்போ கும் முன், கால் மற்றும் பாதத்தை சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும். கண்களை ஒவ் வொரு ஆண்டும் சோதனை செய்ய வேண் டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். நவம்பர் 14 உலக சர்க்கரை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. மக்களை சர்க்கரை நோயிலிருந்து காக்க நாம் உறுதிபூணுவோம்.

செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது

* தினசரி 30 நிமிட நடை * ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது

* 20 நிமிட உடற்பயிற்சி * மாவுப்பொருள், கொழுப்பு, எண்ணெய்யில் பொரித்தவை, சிப்ஸ், கேக், ஐஸ்கிரிம்

* குறைவாக காபி, டீ. பயன்படுத்தவும் * பிஸ்கட், சாக்லெட், கொட்டை போன்றவை

* உடல் பருமனை கட்டுப்படுத்துவது * முட்டையின் மஞ்சள் கரு, ஆடு, கோழி முதலியவை தவிர்த்தல்

* குறைவான மாவுப்பொருள் புரதம் * அதிக உணவை உட்கொள்வது

உட்கொள்வது * பட்டினி கிடப்பது

* அதிக நார்ச்சத்துள்ள * அதிக உப்பு, கருவாடு,

பொருட்களை உண்ணுதல் ஊறுகாய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

* ஏராளமான முழு தானியங்களை

உட்கொள்ளுதல்

* கால்விரல், பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல்

* வைட்டமின் சி உட்கொள்ளுதல்

* ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்

Wednesday, March 10, 2010

பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி





படித்ததில்                           பிடித்தது





 
நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள்.
ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். “நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா!” என்று மீண்டும் அன்போடு கேட்டோம். அவர்கள் மீண்டும் நாயை ஏவினார்கள்.
நாங்கள் எங்களின் வீட்டைக் கேட்பதும், அவர்கள் நாயை ஏவுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நேரத்தில் நாம் எதுவுமே செய்யாது இருக்கின்ற போது கூட நாய் கடிக்கத் தொடங்கியிருந்தது. எம்மைக் காணுகின்ற போதெல்லாம் நாய் துரத்தித் துரத்தி கடித்தது.
எங்களில் சிலர் நாயை அடித்து விரட்ட புறப்பட்டார்கள். எங்களுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு யாரையும் அடித்துப் பழக்கம் இல்லை. இந்தப் பொல்லாத நாயை அடிப்பதைப் பற்றி கற்பனை செய்வதற்கே நாம் தயாராக இருக்கவில்லை. ஆனால் எங்களில் சிலர் “அடிப்போம்” என்று கற்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
எம்மவர்கள் நாயை அடித்தார்கள். என்ன ஆச்சரியம்? நாய் மெது மெதுவாக பின்வாங்கியது. நாய் ஓடுவதைக் கண்டதும் கற்களை எடுக்கின்ற கரங்கள் அதிகரித்தன. ஆயினும் எம்மில் சிலர் நாயின் கடி தாங்காமலும், கடித்து விட்டது என்று சொல்லியும், கடிக்கலாம் என்று சொல்லியும் தூரமாய் இருந்து வேறு வீடுகளுக்குள் போய் அடைக்கலம் ஆனார்கள்.
உண்மையைச் சொல்வது என்றால் நாயை அடிக்கப் புறப்பட்டவர்களை விட நாயைக் காரணம் காட்டி ஓடிப் போனவர்கள்தான் அதிகம். அதே வேளை ஓடிப் போனவர்களும் நாய் அடித்து விரட்டப்படுவதை விரும்பினார்கள். ஆகவே கற்களை பெறுவதற்கு உதவி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
எம்மவர்களின் அடி தாங்காமல் நாய் ஓடினாலும், பின்பு மீண்டும் வந்து எங்கள் மீது பாய்ந்தது. ஒருநாள் எம்மவர்கள் சரியான அடி கொடுத்தார்கள். இனிமேல் நாய் மீண்டும் வராது என்று நாங்கள் நம்பியிருந்தோம்.
அந்த நேரம் பார்த்து யார் யாரோவெல்லாம் வந்தார்கள். அவர்களோடு மீண்டும் பேசுங்கள் என்றார்கள். நாங்களும் அவர்களோடு பேசினோம் “எங்களைக் கடிக்க வருகின்ற உன்னுடைய நாயைப் பிடி! எங்களை எங்களின் வீட்டினுள் வாழ விடு!” என்று மீண்டும் பேசினோம். காலம் பேச்சோடு உருண்டு போனது.
திடீரென்று ஒருநாள் நாய் மீண்டும் எங்களைக் கடித்தது. எம்மவர்களும் மீண்டும் கற்களை எடுத்தார்கள். இம் முறை நாய் மிகவும் கொழுத்துப் போய் நின்றது. அதனுடைய பற்கள் கூர்மையடைந்திருந்தன. நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த நாயோடு வேறு சில நாய்களும் சோந்திருந்தன. எல்லா நாய்களும் சேர்ந்து எம்மை சுற்றிச சுற்றி கடித்தன. எம்மவர்களும் முடிந்த வரை கற்களை வீசினார்கள்.
கடைசியில் நாய் வென்றது. உதவிக்கு வந்த மற்ற நாய்கள் அந்த நாயை வெல்ல வைத்தன என்பதே உண்மை. அவைகளே எம்மவர்களை தோற்கடித்தன.
இப்பொழுது எங்களுக்குள் நிறையக் குழப்பங்கள். “எங்களுக்கு இனிமேல் வீடு வேண்டாம். நாங்கள் ஒரு வீட்டைப் பெறுவதை மற்றவர்கள் விரும்பவில்லை, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்க விடும்படி கேட்போம்” இப்படி சிலர் சொல்கிறார்கள். நாயின் கடியைத் தாங்க முடியாமல் சொந்த வீட்டில் வாடகைக்கு இருப்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
வேறு சிலரோ இன்னும் ஒரு யோசனையை சொல்கிறார்கள். “வீட்டை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாம் தினமும் வாசலில் போய் நின்று அவர்களிடம் பிச்சை எடுப்போம்” இது சிலரின் யோசனை. வீட்டை எம்மிடம் இருந்து பறித்தவர்களுக்கும் இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களும் மிகக் குறைந்த பிச்சையை எங்களுக்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
ஆயினும் எங்களில் சிலர் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. “யாராவது சொந்த வீட்டில் போய் பிச்சை எடுப்பார்களா? இது எங்களின் வீடு! பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி! நாயைப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டை விட்டு வெளியேறு!” என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த உணர்வு இருப்பதனாலேயே எங்கள் வீடு எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு இருக்கின்றது
.நன்றிகள் சபேசன் 

Monday, March 8, 2010

நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"

கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"
                                                  இவர்களுக்கு நீங்கள்செய்யவண்டியது 
                                                                                    /                                                                                
                                                                           இதுதான் 
      "நான் கடவுள்" என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.
                                         செய்வீர்களா?மகாசனங்களே   

Wednesday, March 3, 2010

இர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை அளவு‌க் குறைவத‌ற்கு காரண‌ங்க‌ள்












இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவு‌க் குறைவத‌ற்கு பல காரண‌ங்க‌ள் உ‌ண்டு. அதாவது, போ‌திய உணவு உ‌ட்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது, ‌விரத‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றா‌ல் உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது.

தவறான அளவு ‌நீ‌‌ரி‌ழிவு மா‌த்‌திரை அ‌ல்லது இ‌ன்சு‌‌லி‌ன் உ‌‌ட்கொ‌ள்ளுத‌ல். மது உ‌ட்கொ‌ள்ளுதலு‌ம் காரணமா‌கிறது. ‌சி‌று‌நீரக பா‌தி‌ப்பு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இ‌ன்சு‌லி‌ன் ம‌ற்று‌ம் ‌சில மா‌த்‌திரைக‌ள் மெதுவாக ‌சிறு‌நீ‌ரி‌ல் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது. இதனா‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவை அ‌டி‌க்கடி ச‌ரிபா‌ர்‌த்த‌ல் ந‌ல்லது..

ஈர‌ல் நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை ‌ஏ‌ற்படு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம். ஏன‌ெ‌ன்றா‌ல் இ‌ங்கு தா‌ன் குளு‌க்கோ‌ஸ் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது..

தேவை‌க்கு அ‌திகமாக உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ப்பது‌ம் காரணமாகு‌ம். தேவை‌க்கு அ‌திகமாக உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌த்து‌விடு‌ம்

நித்தியானந்தா?




இன்றும் இலங்கையின் கொடும் சிறைகளில் கதறக் கதறக் கற்பழிக்கப்படும் எம்மினத்தின் பெண்களைக் காக்க எந்த வழியுமின்றி வாய்மூடி மௌனித்து வாளாயிருக்கும் இந்தச் சமூகம் நித்யானந்தாவின் மீது காட்டும் ஆர்வம், எத்தகைய மன வக்கிரம் நிறைந்த ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது. நித்யானந்தாவின் மீது காட்டப்படும் ஆர்வம் ஊடக வன்முறை சார்ந்தது, வன்புணர்ச்சி குறித்த எண்ணற்ற வழக்குகள் பதிவாகும் ஒரு சமூகத்திற்கு இத்தகைய நெறி ஒழுக்கம் குறித்த விவாதம் செய்யத் தகுதி இல்லை, அதற்கான தேவையுமில்லை, புகைப்படக் கருவிகள் நுழைய முடிந்த ஒரு நித்யானந்தாவின் படுக்கையறை வெளியில் தெரிந்து விட்டது, வெளியே தெரியாத எத்தனையோ நித்யானந்தாக்கள் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு சமூகத்தின் பாதுகாப்பில் சுக வாழ்வு வாழ்வதை எந்தத் தொலைக்காட்சியும் படம் பிடிக்க இயலாது.
நித்தியானந்தா? நித்தியானந்தா? நித்தியானந்தா? நித்தியானந்தா?
இன்று ஏலோர் வாக்கும் அவல் கிடைத்திருக்கிறது .
தம்பி அறிவழகன் சிறியவள் மயூ மனோ கருத்துக்களை எலோரும் சென்று உள்வாங்கி கொள்ளவேண்டும்
எனக்கு இந்தக் கோணத்தில் சிந்திப்பதை விட இந்த செய்தியை வெளியிட்ட சண் டிவி மீது சந்தேகமாக இருக்கிறது
ஒருவனின் தனிப்பட்ட அந்தரங்க அறைக்குள் எப்படி சென்றிர்கள்.
அந்த பெண்ணின் முகத்தை காட்டாமல் மறைத்ததன் நோக்கம் என்ன ?
அவர்கள் இருவரும் அன்னியோநியமாகத்தானே இதை ஏன் படம்பிடித்திர்கள்
எம் குல பெண்களை இராணுவம் சித்திரவதை செய்தபோது எங்கே சென்றிகள்
உங்கள் வியாபாரத்திற்கா காமத்தை கருப்பொருளாய் கொள்விர்களா?
இதையும் சிந்தின்கள் சாமி செய்தது சரி என்றுசொல்லவில்லை சன் டிவி செய்தது மட்டும் சரியா?


Mayoo Mano
அண்ணா, இதைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவன் குறித்த மதத்தை சொல்லி, காவி கட்டியவுடனே அவனுக்கு சாமியார் பட்டம் கொடுத்துவிட்டு பின்னாலேயே அலைந்து அவனைக் கடவுளாக்கி உருகி மடிந்து விட்டுப் பின், அவனது தனிப்பட்ட வாழ்க்கை வெளி வந்ததும், கத்திக் கூப்பாடு போடும் இந்த மக்களை எரித்தால் போதும் என்றிருக்கிறது. ஒருவனது படுக்கையறைக்குள் புகுந்து அவன் சுயத்தை வெளிக்கொண்டு வந்து படம் காட்டினால் தான் நீங்கள் அவன் போலி என்று நம்புவீர்கள் என்றால் இங்கு இன்னும் எத்தனை ஏ படங்களை தொலைக்காட்சிகள் வெளிக் கொணரப்போகின்றன. பாழாய்ப் போய்க் கொண்டிருக்கும் உலகத்துக்கு மெல்ல அவல் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

Monday, February 22, 2010

Black Grape - Power of Resveratrol

facebook
Thanabalasingam Sinnathamby
12:54am Feb 22nd
Black Grape - Power of Resveratrol
To Naresh T, Nisha Nathan, and thana1954.bala@blogger.com
 
good for you

Thanabalasingam has shared a link with you. To view it or to reply to the message, follow this link:

http://www.facebook.com/p.php?i=1709878678&k=ZXEUQY64RVTF6BD1QE34V4VVPVIB42YLV4HTE&oid=1329723333488
If you do not wish to receive this type of email from Facebook in the future, please click here to unsubscribe.
Facebook's offices are located at 1601 S. California Ave., Palo Alto, CA 94304.

Friday, February 19, 2010

சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்தம்


சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்தம்

Wednesday, February 17, 2010

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உரு வாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதி யாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத் துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதி யற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல் லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்து டன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர் கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல் லாமல் வாழ முடிகிறது. ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவை யெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, பரீட்சை, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும். புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டி னுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவை யெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய் வறிக்கை. எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத் தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம் முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப் படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக் கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த் துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல் களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தின ரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத் தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதி யான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற் றத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயை யும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக் காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத் துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படு பவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை "முடியாது' என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசி யம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது. உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க் காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்."இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சு??ழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சு??ழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க். குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது "உன்னால் தான் வந்தது' என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் "நமக்கு பிரச்சனை இருக்கிறது' எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே. மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். * வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள். * முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். *கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை. * இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை. * தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள். * செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். *சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி. * செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள். * உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

எளிமையாக வாழுங்கள்.*

உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும். * ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். * என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. * நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். * வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள். * இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள். * பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும். * மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.