tamilveli

More than a Blog Aggregator

Tuesday, July 27, 2010

பட்டாம் பூச்சியே

பட்டாம்  பூச்சியே உன்பட்டு சிறகில் வண்ணம் தீட்டியவன் யாரு? 

எடை குறைக்க ஆசையா? காலையில் முட்டை சாப்பிடுங்க!

 .அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது.

அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது.

அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. “உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம்.

இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .

Saturday, July 24, 2010

படித்தவறும் பாமரரும்

புகைவண்டிப் பயணம் நீண்ட பயணம் சலிப்பு தட்டாமல் இருக்க படித்த ஒருவர் எதிரே

இருந்த பயணியைப் பார்த்து நாம் இருவரும் விடுகதைப் போட்டு பேசிக் கொண்டே
போகலாமே என்றார். எதிர்த்து அமர்ந்து இருந்த பாமரர் சரியென்று சொன்னார். படித்தவர் சொன்னார், சும்மா சொல்லி சென்றால் சுராசியம் இருக்காது எனவே நான்

படித்தவன் நாலும் தெரிந்தவன் நான் தோற்றால் உமக்கு ரூபாய் 2 கொடுப்பேன், நீர்
தோற்றால் எனக்கு ரூபாய் 1 மட்டும் கொடுத்தால் போதும் என்றார். நீரே தொடங்கும்
பார்க்கலாம் என்றார் படித்தவர்.
பாமரர் தொடங்கினார், ஐயா எட்டு காலு, ஒன்பது வாய், பத்து கை அது என்ன என்றார்.
படித்தவர் தலையை பிய்த்துக் கொள்ளாத நிலையாக, தலையை சொரிந்து கொண்டே சொன்னார்.
தெரியவில்லை சொன்னபடியே நான் முதலிலேயே ரூபாய் 2 தந்து விடுகின்றேன் என்று
ரூபாய் 2 கொடுத்தார்.
வாங்கிக் கொண்டு பாமரர் ரூபாய் 1யை திரும்பக் கொடுத்து விட்டு சொன்னார், ஐயா
எனக்கும் அது தெரியாது என்று.
படித்தவர்கள் தங்களது படிப்பு தரும் அறிவினால், ஆணவம் கொள்ளாது, தாழ்ச்சி
கொண்டு நடந்தால் இன்னும் அதிகம் அறிவு பெறலாம்.
நன்றி
ஜோசப் பி கே

Wednesday, July 21, 2010

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை? எது பொய்?
இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!

1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்:           சாப்பிடக்கூடாத பழங்கள்:

1.ஆப்பிள்                                        1.மாம்பழம்

2.ஆரஞ்சு                                        2.வாழை

3.சாத்துக்குடி                                 3.பலாப்பழம்

4.மாதுளை                                    4.சப்போட்டா

5.கொய்யா                                    5.திராட்சை

6.பப்பாளி 6.சீதாப்பழம்

7.தர்பூசணி

8.அன்னாசி

9.எலுமிச்சை

10.தக்காளி

11.நெல்லிக்காய்
.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.
4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.
5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

Monday, July 19, 2010

கருங்காலி கருணாநிதி.

தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இந்தியச் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு தேவையில்லை :-கருணாநிதிக்கு இலங்கை பதில்!


இலங்கை அரசு நேரடியாக கருணாநிதிக்கு பதில் சொல்கிறது.அப்படியானால் ஏன் கருணாநிதி டெல்லிக்கு கடிதம் எழுதுகிறார்.அட விடுங்க ஈழத்தமிழரை. அப்புச்சி ஆளும் தமிழ்நாட்டின் மீனவர்கள் அறுண்ணூறு பேர் இதுவரை இலங்கை அரசால் கொல்லப்பட்டார்களே அப்போதெல்லாம் டெல்கிக்கு தானே கடிதம் எழுதிநிர்கள்.எழுதிக்கொண்டு இருக்கிறிர்கள்.உங்களால் முடியாத ஒன்றை இலங்கை அரசு எப்படி செய்கிறது கருங்காலி கருணாநிதி.

Sunday, July 18, 2010

சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று வகை:- தியாகி திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச!


ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேறளப்பட்டபடும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.

இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசும்- இலங்கையும் தமிழர் உரிமைகள் குறித்துச் செய்துகொண்ட "சமாதான ஒப்பந்தத்தை" உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை இருந்தது.

இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழர்களது, உரிமைகள்; ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை பேசும் இந்திய அரசினாலேயே "கண்டுகொள்ளப் படாமல்" உயிர் இழக்க நேர்ந்தது.
தனை அடுத்து இரண்டாவதாக எமது மனக் கண்களில் நிழலாடுவது, தமிழகத்தின் முதல்வர் "கலைஞர்" நிகழ்த்திய ஐந்து மணிநேர "மெரீனாக்" கடற்கரைப் போராட்டம்.

காற்றோட்டம் நிறைந்த கடற்கரையிலேயே, குளிரூட்டிகள் சகிதம் "உலகப் புகழ்"மிக்க போராட்டத்தை நடாத்தியதன் மூலம் அவர் "முள்ளிவாய்க்கால் படு கொலைகளை" தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்பது இன்றுவரை "மில்லியன் டாலர்" கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

இப்போது மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது, இலங்கை அமைச்சர் ஒருவரின் "போராட்டம்".

சென்ற வருடம், நிகழ்ந்துவிட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மை நிலையினை உலகிற்குத் தெரிவிப்பதற்கென, ஐ.நா வின் தலைமைத்துவத்தால் அனுப்பிவைக்கப் படுவதுதான் இந்த மூவர் குழு.



இதனைக் கலைக்க வேண்டும், இல்லையேல் " சாகும்வரை எனது போராட்டம் தொடரும், நான் இறந்து விட்டால் சிங்களத்தின் மைந்தர்கள் இதனைத் தொடர்வார்கள்" என்று சூளுரைத்துவிட்டுக் களத்தில் குதித்திருக்கிறார் விமல் வீரவன்ச.



இந்த மூவரின் "போராட்டங்க"ளும் ஈழத் தமிழர்கள் தொடர்பானவை என்பதைத் தவிர, அவர்களது குறிக்கோள்கள் வேறுவேறானவையே!



திலீபன் ஓர் "ஆயுதப் போராளி"யாக இருந்தும்; அண்டை நாடொன்று தமிழருக்குச் சில உரிமைகளையாதல் பெற்றுத்தரும் பொருட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தததைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றுங்கள் என்னும் வேண்டுகோளினை முன்வைத்து அதன் மூலம் உயிர் நீத்தார்.



ஓர் இனத்தின் அவல நிலைக்குப் பரிகாரம் வேண்டிப் போராடியவர் அவர். அதன் பின்னணியில் "பதவி ஆசையோ". "நடிப்போ" இருக்கவில்லை. ஆகையினால்தான் தனது "போராட்டத்தில்" உறுதியோடிருந்து, அதனை உதாசீனம் செய்த "அரசுகளின் நடவடிக்கைகளால்" தனதுயிரையும் இழக்க நேர்ந்தது.



அவர் "புலி"யாகவோ அல்லது "சிங்க"மாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.



"கலைஞ"ரின் "உண்ணா விரதப் போராட்டம்" எத்தகையது என்பதை இங்கு விபரமாக எழுதவேண்டியதில்லை. அண்மையில், இலங்கை அரசினால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மீது திடீர்ப் "பாசம்" கொண்டு மீண்டும் "கடிதம்" எழுத ஆரம்பித்ததில் மறைந்திருக்கும் "2011" தமிழகத் தேர்தல் குறித்த அவரது "காய் நகர்த்தல்களை" புரிந்துகொண்டவர்களுக்கு, அன்றைய அவரது "மெரீனா ஒத்திகை"பற்றிய பின்னணியையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



"வீர வன்ச" வின் போராடம் சற்று விசித்திரமானது !



இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும், ஐ.நாவுக்கு, அண்மைக்காலங்களில் கிடைத்த, "2009 ம் ஆண்டின் தமிழினப் படு கொலைகள்" பற்றிய உண்மைகளை அறியும் நிர்ப்பந்தம் அல்லது கடமை உருவாகியிருந்தது.



அதனை நிறைவேற்றுவதற்காக ஐ.நாவின் தலைமை மூவரை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிட்டது.



ஏற்கனவே எமது நாட்டில் அதனை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துவிட்டோம், இனி எதற்கு ஐ.நாவில் விசாரணை என்று "குதிக்கிறது" இலங்கை.



அதன் நிலையை ஆதரித்துப் "போராட்டத்தில்" இறங்கியிருக்கிறார் வீரவன்ச.



ஐ,நா வின் போக்கினை ரஷ்யா போன்றவை வெளிப்படையாகவே கண்டிக்கின்றன. ஒரு காலத்தில் "இரும்புத்திரை நாடு" என்று பெயர் பெற்றிருந்த ரஷ்யா , செச்சென்யாவால் "தலை வலி"யை அனுபவிக்கும் ரஷ்யா ஐ.நாவைக் கண்டிக்காது விட்டிருந்தால்தான் ஆச்சரியம்!



"முக்காடு" போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா இன்னும் வாய் திறக்கவில்லை.



வீரவன்ச எதற்காகப் பயப்படுகிறார் என்பதை அவரது பேச்சே எதிரொலிக்கிறது!



இலங்கையின் தேசீயப் பத்திரிகைகளுள் ஒன்றான "வீர கேசரி"யின் சென்ற வெள்ளிக்கிழமை [09-07-2010] முகப்புச் செய்தியில் வீரவன்சவின் "வீர வசனங்கள்" பதிவாகியிருக்கின்றன.



�வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளைக் கொன்றதாகக் கூறி இலங்கை இராணுவத்தையும் அரச தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிட பான் கீ மூனின் நிபுணர் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சிலரது ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.



எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.நா வின் நிபுணர் குழுவை குறைவாக கணிப்பிடக் கூடாது. ஏனெனில், இந் நிபுணர் குழு எதிர்வரும் நாட்களில் விசாரணைக் குழுவாக மாறலாம். பின்பு பல விசாரணைகளை நடத்தி பொய் குற்றச் சாட்டுகளை நிரூபித்து எமது நாட்டுத் தலைமைத்துவங்களை சர்வதேசம் தூக்கிலிட்டுவிடும்." இவ்வாறு பேசியிருக்கிறார் விமல் வீரவன்ச.



இத்தனைக்கும், ஐ.நா; இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நம்பியாரையும், மேனனையும் நம்பிக் "கைகட்டி நின்ற" ஓர் நிறுவனந்தான்!



இதற்குப் போய் வீரவன்ச இவ்வளவு தூரம் பயப்படுவதுதான் வியப்பாக உள்ளது.



ஒரு வேளை இதுவும் சர்வதேசம் ஆடும் மற்றொரு நாடகமோ ? யார் கண்டது!

Wednesday, July 14, 2010

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான்.

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.
அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.
இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.
மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.
இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
நம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.
அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.
1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.
1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.
ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.
1988ம்ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.
இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.
அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,
நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.
ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.
ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது என்றார்.

Tuesday, July 13, 2010

ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிக்கு எதிரான பிரசாரத்தை எதிரொலிக்கிறது:

ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிக்கு எதிரான பிரசாரத்தை எதிரொலிக்கிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தலைமையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பகிரங்க விரோதத்தை வெளிப்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று விமர்சித்துள்ளது

Friday, July 9, 2010

Wednesday, July 7, 2010

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள் (120). அவர்களுக்கு 10 குழந்தைகள். அதில், ஆறு குழந்தைகள் இறந்து விட்டன.
தற்போது, முத்து (85), காளியப்பன் (65), சின்னசாமி (62) என்ற மகன்களும், மாதம்மாள் (60) என்ற மகளும் உள்ளனர்அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 பேர்.காவேரியம்மாள் 120 வயதிலும் கைத்தடி ஏந்தி கிராமத்தில் சமையல் செய்து, தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளை கண்ட காவேரியம்மாள், இது வரையில் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது.அவருக்கு தற்போது புதிதாக பல் முளைத்திருப்பதை கண்ட அவரது உறவினர்கள், கிராம மக்கள், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காவேரியம்மாளுக்கு சடங்கு செய்து, அவரிடம் ஆசி பெற்றனர்.கிராமத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் காவேரியம்மாளிடம் முதல் ஆசி பெற்று செல்கின்றனர். இன்று வரையில் தனக்கு தேவையான சமையல், வீட்டு வேலைகள் வரை அவரே செய்து கொள்கிறார். அவரது மகன்கள், மகள் வீட்டுக்கு அழைத்த போதும், "தன்னால் முடியும் வரையில் சமைத்து சாப்பிடுவேன்' எனக்கூறி தனியாக குடித்தனம் நடத்தி வரும் காவேரியம்மாள்,வயதில் பூப்படைந்தேன்.

ஆரம்பத்தில் எனது சொந்த ஊரான தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியில் குடியிருந்தோம். கோவிந்தாபுரம் வனப்பகுதியில் கட்டைகள் வெட்டும் கூலி வேலைக்கு நானும், என் கணவரும் வந்தோம். தொடர்ந்து வேலை இருந்ததால், கோவிந்தாபுரத்தில் குடியேறி விட்டோம். சோளம், தினை, கேழ்வரகு ஆகியவற்றை உணவு செய்து சாப்பிட்டோம். தற்போது, சாதம், களி, மட்டன் சாப்பிடுகிறேன்.கடுமையான உழைப்பும், நல்ல உணவும் என் ஆரோக்கியத்துக்கு காரணம் என நினைக்கிறேன். இது வரையில் ஊசி போட்டதில்லை, மாத்திரைகள் சாப்பிட்டதில்லை.

வீட்டில் நான் மூத்தவள் என்பதால், என் மகன்கள் முதல் உறவினர்கள் வரையில் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் காட்டி வருவது எனக்கு ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது. அரிசி சாதம் சமீபத்தில் தான் சாப்பிடுகிறேன். கம்பு, கேழ்வரகு கூழ் தான் எனக்கு முக்கிய ஆகாரம். கிராம மக்களும், உறவினர்களும் நான் மறு பிறவி எடுத்திருப்பதாக எனக்கு சடங்குகள் செய்து, நான் இன்னும் பல ஆண்டு வாழ பூஜைகள் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பம் கொடுத்தேன்.

எனக்கு அதிகம் வயதாகி விட்டது எனக்கூறி முதியோர் உதவி தொகை கொடுக்க மறுத்து விட்டனர். அரசு எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.உடல் நல பாதிப்பு: டாக்டர் கணிப்பு : காவேரியம்மாளுக்கு நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ""பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருக்கலாம்.

அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை. ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல் முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,'' என்றார்."அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு' என, டாக்டர் கூறியதை காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம் வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறினர்.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய தகவல்கள் இதில் உள்ளது.உங்களுக்கு தெரித்த இந்திய நண்பர்களுக்கு அனுப்பிவைக்கவும் நன்றி.

Dear All,
--------------

I received a Wonderful e-mail from my friend..I would like to share

this to you all....

1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact

"RED SOCIETY" 9940217816. They will help that children for their

studies.
2. There is a Website: www.friendstosupport.org where you can search

for any BLOOD GROUP, you will get thousand's of donor address.


3. Engineering Students can register in www.campuscouncil.com to

attend Off Campus for 40 Companies.


4. Free Education and Free hostel for Handicapped children..!

Contact:- 9842062501 & 9894067506
5. If anyone met with fire accident or people born with problems in

their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by

Kodaikanal PASAM Hospital. From 23rd March to 4th April by German

Doctors. Everything is free. Contact : 045420-240668,245732 "Helping

Hands are Better than Praying Lips"
6. If you find any important documents like Driving license, Ration

card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put

them into near by any Post Boxes. They will automatically reach the

owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than

what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So

all of you lend your hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastic

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all

Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them
9. Special phone number for Eye bank and Eye donation 04428281919 and

04428271616 (Sankara Nethralaya Eye Bank)
For More information about how to donate eyes plz visit these sites. . .
http://www.kannoli.com/eyebank.htm
http://ruraleye.org/


10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba

Institute Banglore. Contact : 9916737471


11. Please CHECK WASTAGE OF food If you have a function/party at your

home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only

in India ) - Its not a Joke - Child helpline. They will come and

collect the food. Please circulate this message which can help feed

many children.



.