tamilveli

More than a Blog Aggregator

Monday, March 29, 2010

சர்க்கரை... சர்க்கரை... சர்க்கரை.

சர்க்கரை... சர்க்கரை... சர்க்கரை.....

கி.பி.2000த்தில் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி மக்கள் தொகையில் 2.8 கோடிப்பேர். 2003-ல் 18.9 கோடி. இது கி.பி.2030ல் இரு மடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது. அது போகட்டும். இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா? 1995-ல் 1.9 கோடி. 2005-ல் 3.5 கோடி, 2007ல் 4 கோடி, 2008 ஜூன் 8ம் நாளின் படி 4.1 கோடி ( உலக அளவில் 24.0 கோடி) கி.பி.2025ல் வெற்றிகரமாக 7 கோடியை எட்டும் என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அப்போது உலகில் இந் தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்.

ஏன் சர்க்கரை நோய்

அதெல்லம் சரி! சர்க்கரை நோய் என் றால் என்னப்பா... என்கிறீர்களா? நாம் உட் கொள்ளும் அனைத்து உணவும், உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகின்றது. உட் கிரகித்தலின் மூலம் இரத்தத்தில் சர்க்கரை யாக கலக்கிறது. ஆமாப்பா.. நீங்கள்இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றா லும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி, மட் டன், மீன் என எது உண்டாலும் அது இறுதி யில் சர்க்கரையாக மாற்றப்பட்டே இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தம் மூலம்தான் உடல் உறுப்பு களுக்கு வேண்டிய சக்தி கொடுக்கப்படுகிறது. இந்த சுழற்சியில், இரத்தத்தில் உடலுக்குப் போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா...! கணையம் என்ற சுரப்பி சுரக்கும் இன்சுலின் என்ற ஹார் மோன், அதிகமான சர்க்கரையை, கிளை கோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பாக்கு கிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ ரோத னைதாம்ப்பா..! அதுதாண்ணே சர்க்கரை வியாதி என்ற அருமையான பேருப்பா.. நாம் சர்க்கரை சாப்பிடாததற்கு...!

சர்க்கரையின் காரணி

சர்க்கரை நோய் நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது. இப்போது பொதுவாக பரம்பரை, பரம்பரையாக வரும் என்றாலும், இன்று அதையெல்லாம் தாண்டி, குண்டாக இருப்பவர்களுக்கும் நவீன உணவு மற்றும் வாழ்க்கை முறையும் தான் முக்கியக் காரணிகள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம முன்னெல்லாம், எல்லா இடத்துக்கும் நடந்தே செல்வோம். இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் நம் நடையைக் குறைத்துவிட்டன. நாம் நடக்க சோம்பேறிகளாகிவிட்டோம். அதுவும் கூட சர்க் கரை நோய்க்கான காரணிகளில் ஒன்றாகி விட்டது. அது மட்டுமில்லேப்பா, இன்றைக்கு வாழ்க்கைச் சூழலில் அனைவருக்கும் எல்லா சூழலிலும் பல்வேறு வகையான மன அழுத்தங்கள், மன இறுக்கங்கள் உள்ளன. அதுவும் கூட சர்க்கரை நோய் வருவதற்கான காரணமாம்பா..! அதுமட்டுமல்ல.. நகர்மயமா தல், தொழில்மயமாதல், சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் வாழ்விய லில் அவசர கதியில் செயல்படுவதால்.. ஏரா ளமான உணவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நோய்களில் முக்கிய மானது சர்க்கரை நோய்ப்பா...!

உறுப்புகளை சிதைக்கும் சர்க்கரை நோய்!

சர்க்கரை நோய் என்பது அனைத்து நோய்களின் தாயகம்; உற்பத்திக்கூடம் என்றே சொல்லலாம். இதயம், இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, சிறுநீரக செயலி ழப்பு, நரம்பு பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, ஆண்மை இன்மை ஏற்படுகிறது. விரல்கள், பாதங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. விரல் களிலுள்ள நரம்புகள் சிதைந்து போய், கான் சிரூன் ஏற்பட்டு விரல், கால்களை எடுத்து விடும் நிலை ஏற்படுகிறது.

விழிப்புணர்வற்ற அரசு

மருத்துவ சோதனைக்கு பின்னும் கூட, சர்க்கரை நோயாளிகளிடம் ஏராளமான கவனக்குறைவு உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் மருத்துவரிடம் சென்றாலும், நோய்க்கான அறிகுறி நின்று, நோய் கட்டுப் பாட்டு நிலைக்கு வந்ததும், மருத்துவரிடம் செல்வதை நிறுத்திவிடுகின்றனர். பெரும்பா லான நோயாளிகள், இந்திய பாரம்பரிய, சித்தவைத்திய முறைகளை எடுக்கிறேன் என அலோபதி மருந்துகளை கைவிட்டுவிடுகின் றனர். சர்க்கரை நோய் அதிகரித்தவர்களில் நிறைய நோயாளிகள் இன்சுலின் போட பயந்து அல்லது இதுவே பழக்கமாகிவிடும் எனப்பயந்து, இதனைத் தவிர்க்கின்றனர். இத னால் தொடர்ந்து, மருத்துவரை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் சர்க் கரை நோய் முற்றி சீக்கிரமே அவர்களின் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. மேலும் வள மின்மை, மருத்துவ மீட்பு வசதியின்மை, மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை போன்ற வற்றையும், சர்க்கரை நோய்க்கான அரசின் தரமான சிகிச்சைக்கான தடையாக உள்ளன.

கவனம்... கவனம் ...கவனம்...!

மிகக்கவனமாக இருந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந் தால் சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அத னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதை தெளிவாகத் தெரிந்து நடந்து கொள்வது உயிர்வாழ்வதற்கு உதவிசெய்யும்.

நம்புவதும்....நடப்பதும்...!

சர்க்கரை நோயுள்ளவர்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது. எண்ணெய் பொரித்த பொருட்களை, கொழுப்பு உணவு களை உண்ணலாம் என நினைக்கின்றனர். இது இரத்தத்தின் கொழுப்பை அதிகரித்து, மோசமான பின்விளைவுகளை, மிகை இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணும். இரத்தத்தில் அதிகமான வைட்டமின்-சி இருந் தால், அது 62 சதவீதம் சர்க்கரை நோய் வரு வதை தடைசெய்கிறது. நீங்கள் உணவருந்த உட்கார்ந்ததும், தட்டை 4 பகுதிகளை கற்பனை கோடு வரைந்து கொள்ளுங்கள். 1/4 பங்கு தானியம், உணவு, 1/4 பங்கு புரதம், 1/4 பங்கு காய்கறிகள் உண்ணவும், காரட், கீரை, தக்காளி மற்றும் கொழுப்பற்ற 1 டம்ளர் மோர் அருந்தவும், இவையெல்லாம் உங்களின் சர்க்கரை நோயைக் குறைக்கும்.

உயிர்காக்க...!

சர்க்கரைக்கு மாறாக பயன்படுத்தும் பொருட்கள், சர்க்கரையைவிட மோசமான விளைவைத் தரும், செயற்கை இனிப்பு களையும் பயன்படுத்துவது தவறு. அதை உண்ணுவதால் நம் உடல் சீனிக்காக ஏங்கி தவம் கிடக்கிறது. தினமும் இரவு படுக்கப்போ கும் முன், கால் மற்றும் பாதத்தை சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும். கண்களை ஒவ் வொரு ஆண்டும் சோதனை செய்ய வேண் டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். நவம்பர் 14 உலக சர்க்கரை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. மக்களை சர்க்கரை நோயிலிருந்து காக்க நாம் உறுதிபூணுவோம்.

செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது

* தினசரி 30 நிமிட நடை * ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது

* 20 நிமிட உடற்பயிற்சி * மாவுப்பொருள், கொழுப்பு, எண்ணெய்யில் பொரித்தவை, சிப்ஸ், கேக், ஐஸ்கிரிம்

* குறைவாக காபி, டீ. பயன்படுத்தவும் * பிஸ்கட், சாக்லெட், கொட்டை போன்றவை

* உடல் பருமனை கட்டுப்படுத்துவது * முட்டையின் மஞ்சள் கரு, ஆடு, கோழி முதலியவை தவிர்த்தல்

* குறைவான மாவுப்பொருள் புரதம் * அதிக உணவை உட்கொள்வது

உட்கொள்வது * பட்டினி கிடப்பது

* அதிக நார்ச்சத்துள்ள * அதிக உப்பு, கருவாடு,

பொருட்களை உண்ணுதல் ஊறுகாய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

* ஏராளமான முழு தானியங்களை

உட்கொள்ளுதல்

* கால்விரல், பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல்

* வைட்டமின் சி உட்கொள்ளுதல்

* ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்

Wednesday, March 10, 2010

பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி





படித்ததில்                           பிடித்தது





 
நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள்.
ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். “நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா!” என்று மீண்டும் அன்போடு கேட்டோம். அவர்கள் மீண்டும் நாயை ஏவினார்கள்.
நாங்கள் எங்களின் வீட்டைக் கேட்பதும், அவர்கள் நாயை ஏவுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நேரத்தில் நாம் எதுவுமே செய்யாது இருக்கின்ற போது கூட நாய் கடிக்கத் தொடங்கியிருந்தது. எம்மைக் காணுகின்ற போதெல்லாம் நாய் துரத்தித் துரத்தி கடித்தது.
எங்களில் சிலர் நாயை அடித்து விரட்ட புறப்பட்டார்கள். எங்களுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு யாரையும் அடித்துப் பழக்கம் இல்லை. இந்தப் பொல்லாத நாயை அடிப்பதைப் பற்றி கற்பனை செய்வதற்கே நாம் தயாராக இருக்கவில்லை. ஆனால் எங்களில் சிலர் “அடிப்போம்” என்று கற்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
எம்மவர்கள் நாயை அடித்தார்கள். என்ன ஆச்சரியம்? நாய் மெது மெதுவாக பின்வாங்கியது. நாய் ஓடுவதைக் கண்டதும் கற்களை எடுக்கின்ற கரங்கள் அதிகரித்தன. ஆயினும் எம்மில் சிலர் நாயின் கடி தாங்காமலும், கடித்து விட்டது என்று சொல்லியும், கடிக்கலாம் என்று சொல்லியும் தூரமாய் இருந்து வேறு வீடுகளுக்குள் போய் அடைக்கலம் ஆனார்கள்.
உண்மையைச் சொல்வது என்றால் நாயை அடிக்கப் புறப்பட்டவர்களை விட நாயைக் காரணம் காட்டி ஓடிப் போனவர்கள்தான் அதிகம். அதே வேளை ஓடிப் போனவர்களும் நாய் அடித்து விரட்டப்படுவதை விரும்பினார்கள். ஆகவே கற்களை பெறுவதற்கு உதவி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
எம்மவர்களின் அடி தாங்காமல் நாய் ஓடினாலும், பின்பு மீண்டும் வந்து எங்கள் மீது பாய்ந்தது. ஒருநாள் எம்மவர்கள் சரியான அடி கொடுத்தார்கள். இனிமேல் நாய் மீண்டும் வராது என்று நாங்கள் நம்பியிருந்தோம்.
அந்த நேரம் பார்த்து யார் யாரோவெல்லாம் வந்தார்கள். அவர்களோடு மீண்டும் பேசுங்கள் என்றார்கள். நாங்களும் அவர்களோடு பேசினோம் “எங்களைக் கடிக்க வருகின்ற உன்னுடைய நாயைப் பிடி! எங்களை எங்களின் வீட்டினுள் வாழ விடு!” என்று மீண்டும் பேசினோம். காலம் பேச்சோடு உருண்டு போனது.
திடீரென்று ஒருநாள் நாய் மீண்டும் எங்களைக் கடித்தது. எம்மவர்களும் மீண்டும் கற்களை எடுத்தார்கள். இம் முறை நாய் மிகவும் கொழுத்துப் போய் நின்றது. அதனுடைய பற்கள் கூர்மையடைந்திருந்தன. நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த நாயோடு வேறு சில நாய்களும் சோந்திருந்தன. எல்லா நாய்களும் சேர்ந்து எம்மை சுற்றிச சுற்றி கடித்தன. எம்மவர்களும் முடிந்த வரை கற்களை வீசினார்கள்.
கடைசியில் நாய் வென்றது. உதவிக்கு வந்த மற்ற நாய்கள் அந்த நாயை வெல்ல வைத்தன என்பதே உண்மை. அவைகளே எம்மவர்களை தோற்கடித்தன.
இப்பொழுது எங்களுக்குள் நிறையக் குழப்பங்கள். “எங்களுக்கு இனிமேல் வீடு வேண்டாம். நாங்கள் ஒரு வீட்டைப் பெறுவதை மற்றவர்கள் விரும்பவில்லை, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்க விடும்படி கேட்போம்” இப்படி சிலர் சொல்கிறார்கள். நாயின் கடியைத் தாங்க முடியாமல் சொந்த வீட்டில் வாடகைக்கு இருப்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
வேறு சிலரோ இன்னும் ஒரு யோசனையை சொல்கிறார்கள். “வீட்டை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாம் தினமும் வாசலில் போய் நின்று அவர்களிடம் பிச்சை எடுப்போம்” இது சிலரின் யோசனை. வீட்டை எம்மிடம் இருந்து பறித்தவர்களுக்கும் இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களும் மிகக் குறைந்த பிச்சையை எங்களுக்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
ஆயினும் எங்களில் சிலர் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. “யாராவது சொந்த வீட்டில் போய் பிச்சை எடுப்பார்களா? இது எங்களின் வீடு! பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி! நாயைப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டை விட்டு வெளியேறு!” என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த உணர்வு இருப்பதனாலேயே எங்கள் வீடு எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு இருக்கின்றது
.நன்றிகள் சபேசன் 

Monday, March 8, 2010

நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"

கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"
                                                  இவர்களுக்கு நீங்கள்செய்யவண்டியது 
                                                                                    /                                                                                
                                                                           இதுதான் 
      "நான் கடவுள்" என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.
                                         செய்வீர்களா?மகாசனங்களே   

Wednesday, March 3, 2010

இர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை அளவு‌க் குறைவத‌ற்கு காரண‌ங்க‌ள்












இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவு‌க் குறைவத‌ற்கு பல காரண‌ங்க‌ள் உ‌ண்டு. அதாவது, போ‌திய உணவு உ‌ட்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது, ‌விரத‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றா‌ல் உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது.

தவறான அளவு ‌நீ‌‌ரி‌ழிவு மா‌த்‌திரை அ‌ல்லது இ‌ன்சு‌‌லி‌ன் உ‌‌ட்கொ‌ள்ளுத‌ல். மது உ‌ட்கொ‌ள்ளுதலு‌ம் காரணமா‌கிறது. ‌சி‌று‌நீரக பா‌தி‌ப்பு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இ‌ன்சு‌லி‌ன் ம‌ற்று‌ம் ‌சில மா‌த்‌திரைக‌ள் மெதுவாக ‌சிறு‌நீ‌ரி‌ல் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது. இதனா‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவை அ‌டி‌க்கடி ச‌ரிபா‌ர்‌த்த‌ல் ந‌ல்லது..

ஈர‌ல் நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை ‌ஏ‌ற்படு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம். ஏன‌ெ‌ன்றா‌ல் இ‌ங்கு தா‌ன் குளு‌க்கோ‌ஸ் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது..

தேவை‌க்கு அ‌திகமாக உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ப்பது‌ம் காரணமாகு‌ம். தேவை‌க்கு அ‌திகமாக உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌த்து‌விடு‌ம்

நித்தியானந்தா?




இன்றும் இலங்கையின் கொடும் சிறைகளில் கதறக் கதறக் கற்பழிக்கப்படும் எம்மினத்தின் பெண்களைக் காக்க எந்த வழியுமின்றி வாய்மூடி மௌனித்து வாளாயிருக்கும் இந்தச் சமூகம் நித்யானந்தாவின் மீது காட்டும் ஆர்வம், எத்தகைய மன வக்கிரம் நிறைந்த ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது. நித்யானந்தாவின் மீது காட்டப்படும் ஆர்வம் ஊடக வன்முறை சார்ந்தது, வன்புணர்ச்சி குறித்த எண்ணற்ற வழக்குகள் பதிவாகும் ஒரு சமூகத்திற்கு இத்தகைய நெறி ஒழுக்கம் குறித்த விவாதம் செய்யத் தகுதி இல்லை, அதற்கான தேவையுமில்லை, புகைப்படக் கருவிகள் நுழைய முடிந்த ஒரு நித்யானந்தாவின் படுக்கையறை வெளியில் தெரிந்து விட்டது, வெளியே தெரியாத எத்தனையோ நித்யானந்தாக்கள் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு சமூகத்தின் பாதுகாப்பில் சுக வாழ்வு வாழ்வதை எந்தத் தொலைக்காட்சியும் படம் பிடிக்க இயலாது.
நித்தியானந்தா? நித்தியானந்தா? நித்தியானந்தா? நித்தியானந்தா?
இன்று ஏலோர் வாக்கும் அவல் கிடைத்திருக்கிறது .
தம்பி அறிவழகன் சிறியவள் மயூ மனோ கருத்துக்களை எலோரும் சென்று உள்வாங்கி கொள்ளவேண்டும்
எனக்கு இந்தக் கோணத்தில் சிந்திப்பதை விட இந்த செய்தியை வெளியிட்ட சண் டிவி மீது சந்தேகமாக இருக்கிறது
ஒருவனின் தனிப்பட்ட அந்தரங்க அறைக்குள் எப்படி சென்றிர்கள்.
அந்த பெண்ணின் முகத்தை காட்டாமல் மறைத்ததன் நோக்கம் என்ன ?
அவர்கள் இருவரும் அன்னியோநியமாகத்தானே இதை ஏன் படம்பிடித்திர்கள்
எம் குல பெண்களை இராணுவம் சித்திரவதை செய்தபோது எங்கே சென்றிகள்
உங்கள் வியாபாரத்திற்கா காமத்தை கருப்பொருளாய் கொள்விர்களா?
இதையும் சிந்தின்கள் சாமி செய்தது சரி என்றுசொல்லவில்லை சன் டிவி செய்தது மட்டும் சரியா?


Mayoo Mano
அண்ணா, இதைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவன் குறித்த மதத்தை சொல்லி, காவி கட்டியவுடனே அவனுக்கு சாமியார் பட்டம் கொடுத்துவிட்டு பின்னாலேயே அலைந்து அவனைக் கடவுளாக்கி உருகி மடிந்து விட்டுப் பின், அவனது தனிப்பட்ட வாழ்க்கை வெளி வந்ததும், கத்திக் கூப்பாடு போடும் இந்த மக்களை எரித்தால் போதும் என்றிருக்கிறது. ஒருவனது படுக்கையறைக்குள் புகுந்து அவன் சுயத்தை வெளிக்கொண்டு வந்து படம் காட்டினால் தான் நீங்கள் அவன் போலி என்று நம்புவீர்கள் என்றால் இங்கு இன்னும் எத்தனை ஏ படங்களை தொலைக்காட்சிகள் வெளிக் கொணரப்போகின்றன. பாழாய்ப் போய்க் கொண்டிருக்கும் உலகத்துக்கு மெல்ல அவல் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான்.