tamilveli

More than a Blog Aggregator

Saturday, January 30, 2010

சிறிலங்கா தேர்தலின் பின் அதிக முறைகேடுகள் - தடுத்து நிறுத்த பான் கீ மூன் கோரிக்கை

சிறிலங்கா தேர்தலின் பின் அதிக முறைகேடுகள் - தடுத்து நிறுத்த பான் கீ மூன் கோரிக்கை

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு உள்நாட்டில் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், இவற்றை உடனடியாக கட்டுப்படுத்தும் படியும் ஐ.நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் சிறிலங்கா அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் சார்பில் அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக்ம் விடுத்துள்ள செய்தியில் சிறீலங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஊடக சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலிலும் பல்வேறு முறைப்பாடுகள் இடம்பெற்றிருப்பதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவற்றை உடனடியாக ஆராய்ந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக, நாட்டின் அனைத்து அரசியற்கட்சிகளும் செயற்பட வேண்டும் என பான் கீ மூன் கோரிக்கை விடுப்பதாக, தெரிவித்துள்ளார்.



எதிர்காலத்தில் நீதியானதும், சுதந்திரமானவும், ஆட்சி கட்டியெழுப்பப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், தேர்தல் முடிவுகளும் அதையே உணர்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி சார்பு பத்திரிகை லங்கா ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த, குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டமை, தேர்தல் முறைகேடுகள் பற்றி ஆராய்ந்த, சுவிற்சர்லாந்தை சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளர், நாட்டை விட்டு வெளியேற்ற பணிக்கபப்ட்டிருந்தமை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகவின் காரியாலயம் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தமை போன்ற செயல்கள், தேர்தலின் பின்பு இடம்பெற்ற முக்கிய வன்முறைப்போக்கான சம்பவங்கள் ஆகும்.

Friday, January 29, 2010

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன்

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்


பதிந்தவர்_வன்னியன் on January 29, 2010

பிரிவு: கட்டுரைகள், பிரதானச்செய்திகள் [ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.

ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவர்களையே சாரும். இவர் செய்ததில் மிகக்கொடுமையான காரியம் எதுவென்றால் கூட்டணிக்கட்சித்தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றிக்கடனாக தோழர் முத்துக்குமரன் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடக்கி ஒடுக்கியதே.



கடந்த சனவரி 29 வியாழன் அன்று முத்துக்குமரன் தீக்கு தன்னை இரையாக்கி தமிழக மாணவர்களிடம் எழுச்சியை உண்டாக்கிய தொடக்கத்திலிருந்து தொல்.திருமாவளவனின் சகுனித்தனம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இம்மாணவர் எழுச்சியை வளரவிட்டால் ஆளும் கட்சியான திமுக அரசு கலைக்கப்படும். இதனால் தனக்கு நட்டம் என்று தொல்.திருமாவளவனின் மூளை வேலை செய்துவிட்டது. ஏனென்றால மாணவர்கள் எழுச்சி என்பது எப்படிப்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.



முத்துக்குமரனின் கோரிக்கையான “எனது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்று சொன்னதற்கிணங்க மாணவர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு அருகிலேயே பெரிய மைதானம் எதிலாவது அனைத்து மக்களும் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் திமுக வின் கூட்டணி கட்சியினரும் ஆளும் அரசின் காவல்படையுன் இணைந்து முத்துக்குமரனின் வீடு உள்ள கொளத்தூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களை மிரட்டி கொண்டு சென்றனர்.



சென்னையிலிருந்து முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூருக்கு உடலை கொண்டு சென்று தமிழகம் முழுக்க எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால் “உடல் அழுகிவிடும்” என்றுக்கூறி ஐஸ் பாக்ஸ் இருக்கும் இக்காலத்தில் திமுக அரசின் கூட்டணியிலுள்ள தலைவர் தடுத்துவிட்டார்.



சரி அடக்கத்தினையாவது தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வரும் வகையில் அடக்கத்தினை ஞாயிறு(பெப் 1) அன்று வைக்கலாம் என்று மாணவர்கள் கூறினார்கள். ஆனால் திமுக அடிவருடி கட்சிகளின் முயற்சியால் சனிக்கிழமை( சனவரி 31) அன்று வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.



சனவரி 31 அன்று கொளத்தூரிலிருந்து ஈகி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. போகும் வழியில் பெரம்பலூரிலிருந்து புரசைவாக்கம் வழியாக சென்றால் இன்னும் அதிகமாக மக்களிடம் எழுச்சி உண்டாகும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று மாணவர்கள் வற்புறுத்தி மறியல் செய்தனர். அப்பொழுது வாகனம் ஒன்றில் நின்றுகொண்டு வந்த தொல்.திருமாவளவனின் வழிகாட்டலில் திருமாவளவனின் உடன் இருக்கும் வன்னியரசு என்பவர் சில ஆட்களுடன் ஓடி வந்து மாணவர்களிடம் புரசைவாக்கம் வழி செல்ல இயலாது என்று கூறினார். மாணவர்களும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் வெகுண்ட திருமாவளவனின் கையாட்கள் அண்ணன் திருமாவின் பேச்சை கேட்க மாட்டீர்களா என்று முதன்முறையாக இரு மாணவர்களை அடித்து மிரட்டினர். அப்பொழுதுதான் திமுக அரசின் கையாளாக மாணவர் எழுச்சியை ஒடுக்க காக்கிச்சட்டை போடாத அரசின் கையாளாக திருமாவளவன் வந்துள்ளார் என்பது மாணவர்களுக்கு தெரியவந்தது.



அந்த மாணவர்களுக்கு அமைப்போ, தலைமையோ ஏதும் கிடையாது. இதனால் தங்களால் இவர்களை எதிர்க்க இயலாது என்று பின்வாங்கிவிட்டனர். பின்னர் திமுக அரசின் எண்ணம் போல் திருமாவளவன் வழிநடத்திச்சென்றார். பின்னர் மயானத்தினை நெருங்கும் வேளையில் இரவு 9.30 மணியளவில் திமுக அரசு முத்துக்குமரனின் தியாகத்தினால் ஏற்பட்ட ஈழ ஆதரவு எழுச்சியை கண்டு பயந்து அதை ஒடுக்க அடுத்த திட்டமாக இரவோடு இரவாக கல்லூரிகளை காலவரையற்று மூட உத்தரவிட்டது.



திமுக அரசின் இவ் அறிக்கையினால் வெகுண்டெழுந்த மாணவர்கள் ஈகி முத்துக்குமரன் கூறியபடி “எமது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்பதற்கிணங்க “திமுக அரசின் உத்தரவினை திரும்பப் பெறாவிடில் முத்துக்குமரனின் சடலத்தினை எரிக்க விடமாட்டோம்” என்று சாலையின் நடுவில் வைத்து மறுபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து துணைநின்றனர்.



அப்பொழுது மறுபடியும் திமுக அரசின் கையாளான திருமாவளவனின் கையாள் வன்னியரசு மாணவர்களிடம் வந்து “இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது முத்துக்குமாரை அவமானப் படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். அபொழுதுதான் மாணவர்களுக்கு புரிந்தது முத்துக்குமரனின் கொள்கை என்ன என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு சுத்தமாக தெரியாது என்பது. அப்பொழுது, திருமாவளவனின் கையாட்கள் இரண்டாவது முறையாக மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கினர். ஊர்தியின் மேல் அமர்ந்து இருந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கீழே தள்ளிவிட்டு ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது வன்னியரசு மாணவர்களை திருமா அண்ணாவின் சொல்லை கேட்காத உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி உடலை எரித்துவிட்டு வந்து உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டிவிட்டுச்சென்றார். இவைகள் எல்லாம் தொல்.திருமாவளவனின் பார்வையில்தான் நடைபெற்றது.



உண்மையான உணர்வோடு முத்துக்குமரன் தீக்குளித்ததிலிருந்து இறுதி வரை வந்த அம்மாணவர்கள் இவர்களின் செயல்பாடுகளால் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தங்கள் இரு சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருந்த கொளத்தூருக்கு வேக வேகமாக ஓடிவந்தோம்.



இதைப்பற்றிய செய்தியினை தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் இந்திய எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழ் மட்டும் வெளியிட்டிருந்தது. செய்தியினை முழுவதும் போடாமல் சிறிதளவு வெளியிட்டிருந்தது. அப்படி முழுவதும் போட்டிருந்தால் அப்பத்திரிக்கை அலுவலகத்தினை குண்டர்கள் எரித்திருப்பார்கள்.



அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.







அப்பொழுது மட்டும் திருமாவளவன் என்ற நபரும், விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியும் இல்லாமலிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாணவர் பேரெழுச்சி 1983 காலகட்டத்தில் ஏற்பட்டதைப்போல் உண்டாகியிருக்கும் திமுக அரசு கலைந்திருக்கும் அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். ஈழமக்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறி இருக்கும்.



ஈழமக்களைப்பற்றி வாயில் மட்டும் பேசி வரும் இப்படிப்பட்ட பச்சைத் துரோகி தொல்.திருமாவளவனை தமிழக மக்களும், தமிழீழ மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்..

ஹிலாரி கிளிண்டன்

ஒபாமா அரசில் 8 ஆண்டுகள் முழுமையாக பணிபுரிய முடியாது

அமெரிக்க அதிபர் ஒபாமா அரசில் வெளியுறவு துறை மந்திரியாக ஹிலாரி கிளிண்டன் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க அரசியல் உயிர் பதவியில் இருந்து வருகிறார்.



கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு அதிபர் பராக் ஒபாமா அரசில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.



சமீபத்தில் அவர் ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு ஒபாமா வெற்றி பெற்றாலும் அவரது அரசியல் என்னால் 8 ஆண்டுகள் முழுமையாக வெளியுறவு துறை மந்திரியாக பணிபுரிய முடியாது. ஏனென்றால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சவாலான பதவி.



24 மணி நேரமும் ஒயாமல் பணிபுரிய வேண்டியுள்ளது. எப்போதும் ஏதேனும் ஒரு பிரச்சினையை பற்றிய நினைவே உள்ளது. ஆனால் இந்த பதவியை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்று செய்து வருகிறேன்.



மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. எனது வாழ்க்கையில் நான் அதிபரின் மனைவி, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதி (செனட்டர்) என பல பொறுப்பான பதவிகளில் இருந்து விட்டேன். எனவே எதிர்காலத்தில் பல புத்தகங்களை படிப்பது, பல பயனுள்ள கட்டுரைகளை எழுதுவது, கல்வி கற்று கொடுப்பது என சமூக பணிகளில் என்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

Thursday, January 21, 2010

Monday, January 18, 2010

இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது - டப்ளின் மக்கள் தீர்ப்பாயம்




தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையினை செய்துள்ளது என டப்ளினில் கூடிய மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கள இராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது.

இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத் தீவில் இருந்து தப்பி வந்த சாட்சிகளும், ஏராளமான ஆவணங்களும், படப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இரண்டு நாள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நேற்று (டப்ளின் நேரப்படி) பிற்பகல் 2 மணிக்கு, மக்கள் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹூதா, தீர்ப்பாயத்தின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை (preliminary Findings) வெளியிட்டார்.

அதன்படி, கீழ்க்கண்ட 4 கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹூதா அறிவித்தார்:

1. இலங்கை அரசு போர்க் குற்றவாளியே.

2. இலங்கை அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.

3. இலங்கைக்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

4. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.



இந்த விசாரணையின் போது பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதும், அவர்களின் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும் உறுதி செய்யப்பட்டது.

பிரான்சுவா ஹூதா தலைமையிலான இத்தீர்ப்பாயத்தில் ஐரிஸ் நாட்டின் டெனிஸ் ஹாலிடே, மேரி லாலர், இந்திய நீதிபதி (ஓய்வு) இராஜேந்திர சச்சார் உள்ளிட்ட 10 பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரிஸ் மக்கள் தீர்ப்பாயத்திற்கு ஏற்பாடு செய்து சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது:

1. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசப் படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன மீது ஐ.நா. பான்னாட்டு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.

2. வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும், இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 11,000 பேர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

3. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள், அப்பாவி மக்களுக்கு உணவு, குடிநீர் அளிக்காமல் துன்புறுத்துதல் ஆகிய அனைத்து குற்றங்களையும் முழுமையாக நிறுத்துமாறு சிறிலங்க அரசைக் கோருகிறோம்.

4. அரசியல் எதிர்ப்பை வன்முறையின் மூலமாகவும், மற்ற வழிகளிலும் ஒடுக்குவதை சிறிலங்க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

5. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டு இழைத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், அவர்களுடைய பங்கேற்புடன் கூடிய அரசியல் தீர்வு காணும்படியும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை நடைமுறைபடுத்துமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி ஈழநாதம்.

Saturday, January 9, 2010

சிங்களத்தின் சிறைதனிலே

தரணியிலே நீஎடுத்த முத்து


பிரபாகரன் எனும் சொத்து

எதிரிகளின் சதியில் சிக்கி

விதி வழியே மறைக்கப்பட்டார்

தனி வழியே உனைப்போகவிட்டு

தமிழர் நாம் தவிக்கின்றோம்

முதுவயத்தில் சிங்களத்தின்

சிறை கண்டாய்

தள்ளாத வயதினிலே

தான்னியங்க முடியாத நிலையினிலே

போராளி என சிறைபிடித்த

சிங்களத்தின் சிறைதனிலே

எமைவிட்டு சென்றனையோ

மிண்டும் வந்துவிடு

எம்முடனே வாழ்ந்துவிடு
தனா

Thursday, January 7, 2010

Latest Tamil Movies Tamil Movies Avatar - Tamil

Latest Tamil Movies Tamil Movies Avatar - Tamil

அட கடவுளே- புகை பிடித்தால் 1 கோடி அபராதம்

அட கடவுளே- புகை பிடித்தால் 1 கோடி அபராதம்


புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்படும்.